செந்தில்பாலாஜிக்கு எப்போது அறுவைச் சிகிச்சை? 8 நாட்களாக இழுக்க வேண்டிய அவசியம் என்ன? -சீமான்
நெல்லை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என கூறிவிட்டு ஏழு, எட்டு, நாட்களாக இழுக்க வேண்டிய அவசியம் என்ன என நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சீமான், அங்கு செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
செந்தில்பாலாஜியை பொறுத்தவரை அவர் தனக்கு தம்பி தான் என்றும் அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடிந்து நலம் பெறட்டும் என்று தான், தாம் நினைப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அதற்காக செந்தில்பாலாஜியின் உடல்நலத்தை காரணம் காட்டி புனிதர் பட்டத்தை தேடிக்கொள்ளும் முயற்சியை ஏற்க முடியாது என சீமான் தெரிவித்தார். இதன் மூலம் அடித்த கொள்ளை, செய்த ஊழல், பெற்ற லஞ்சம் என எதுவும் கவனத்தில் வராது என நினைக்கிறார்கள் போல் என விமர்சித்தார்.
செந்தில்பாலாஜிக்கு முடியல முடியல என்கிறார்கள் அவரால் நாங்கள் பட்ட துயரத்தை சொல்ல முடியல என கலாய்த்த சீமான், செந்தில்பாலாஜிக்கு அறுவைச் சிகிச்சை செய்தால் அதனை நேரலையில் ஒளிப்பரப்புமாறு தெரிவித்தார். செந்தில்பாலாஜியிடம் தான் சாவி இருப்பதாகவும் அதனை திறந்தால் மொத்தமாக எல்லோரும் மாட்டிக் கொள்வார்கள் எனவும் கூறினார்.
மேலும், என்னிடம் என்ன காசு பணமா இருக்கு கொடுப்பதற்கு என வினவிய சீமான், நடப்பதற்கு கால்களும், பேசுவதற்கு வாயும், சொல்வதற்கு கருத்துக்களும் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை டிசம்பர் மாதம் கூட நடப்பதற்கு வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications