Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவ - மாணவிகளுக்கு சித்ரவதை.. நெல்லை நீட் பயிற்சி மையத்தில் கொடுமை.. கண்மூடித்தனமான தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் பிரபல ‛நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையத்தில் ரத்தம் வரும்படியாக மாணவர்களை பிரம்பால் அடித்ததும், மாணவிகள் மீது காலணி, டஸ்டர் உள்ளிட்டவற்றை வீசியும் சித்ரவதை செய்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நம் நாட்டில் தற்போது இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதுநிலை மருத்துவ படிப்புக்கும் ‛நீட்’ தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தான் பிளஸ் 2 படிப்பை முடிக்கும் பலரும் ‛நீட்’ தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

neet coaching centre tirunelveli nellai

மாணவர்களில் ஒரு தரப்பினர் வீடுகளில் இருந்தபடியே தங்களது பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டலின்படி ‛நீட்’ தேர்வுக்கு படித்து வருகின்றனர். அதேபோல் இன்னொரு தரப்பு மாணவர்கள் லட்சக்கணக்கான பணத்தை செலவழித்து ‛நீட்’ தேர்வு மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து ‛நீட்’ தேர்வுக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றனர். மருத்துவ படிப்பை பொறுத்தவரை ‛நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் ‛நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று அந்தகட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் மத்திய அரசு கண்டுக்கொள்ளாமல் உள்ளது.

‛நண்பன் பட பந்தம்’.. விஜயின் தவெக மாநாட்டில் பங்கேற்கும் பிரபலம்? கவனம் பெறும் நடிகர் ஜீவா!


இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோ என்பது திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் ‛நீட்’ தேர்வு மையத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. வீடியோவில் ஒருவர், அதேபோல் பயிற்சி மைய வகுப்பறையில் மாணவ - மாணவிகள் அமர்ந்து இருக்கின்றனர். அப்போது உள்ளே வரும் ஒருவர் மாணவி மீது காலணி கொண்டு எறிகிறார்.

அந்த காலணி மாணவி மீது விழுகிறது. அதாவது மாணவி பயிற்சி மைய வாசலில் முறையாக காலணியை கழற்றிவிடவில்லை என்று கூறி வீசியுள்ளார். அதேபோல் வகுப்பறையின் கரும்பலகை எழுத்தை அழிக்க பயன்படுத்தும் டஸ்டரை கொண்டும் அவர் மாணவிகள் மீது வீசியதாக சொல்லப்படுகிறது.

வயநாடு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டி? பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக வியூகம்! பரபர தகவல்


அதுமட்டுமின்றி மாணவர்களை ஆக்ரோஷமாக திட்டுகிறார். அதுமட்டுமின்றி மாணவர்களை வரிசையாக வரவைத்து பிரம்பால் கண்மூடித்தனமாக மிகவும் கொடூரமாக தாக்குகிறார். மாணவர்கள் ஒவ்வொருவராக அவரிடம் பிரம்பு அடி வாங்கி கொண்டு சுவற்றின் அருகே சென்று நிற்கின்றனர். இதில் சில மாணவர்களின் கால், தொடை பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இதுபற்றி மாணவ-மாணவிகள் சார்பில் போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் வீடியோ வெளியான நிலையில் சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் மற்றும் திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகள் மீதான இந்த சித்ரவதை வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதனை பார்க்கும் பலரும் அந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+