அரசு சொல்வதை கேட்பதுதான் ஆளுநர் வேலை.. திருமுருகன் காந்தி காட்டம்
Recommended Video

நெல்லை: 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர், அரசியல் சாசனத்திற்கு புறம்பாக நடந்து வருவதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த திருமுருகன் காந்தி கூறியதாவது: ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. மக்கள் தேர்ந்தெடுத்த அரசு சொல்வதை கேட்டு நடப்பதுதான் ஆளுநரின் பணி. அதை மீறி தமிழக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டு உள்ளார்.

7 தமிழர் விடுதலை தள்ளிப்போடப்படுகிறது. ஆளுநர் என்பவர் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டவர். தன்னிச்சையாக ஆளுநர் செயல்படுவது சட்ட விரோதமானது.
கஜா பணிகளுக்குப் போதிய நிதியை தமிழக அரசு கோரவில்லை. ஏற்கனவே கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இம்முறை தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து உரிய முறையில் நிதி உதவி கேட்கவில்லை.
ஒக்கி, வர்தா புயல், வறட்சி பாதிப்பு போன்றவற்றுக்கு எல்லாம் நிவாரணமாக தமிழக அரசு கேட்டது 70 முதல் 80 ஆயிரம் கோடிகள் ஆகும். ஆனால் மத்திய அரசு வழங்கியுள்ளது 7 ஆயிரம் கோடியைத் தாண்ட வில்லை.
டெல்டா மாவட்டங்களில், கஜா புயலால் வீழ்ச்சியடைந்த, 40 லட்சம் தென்னை மரங்களுக்கு மட்டுமே 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக நஷ்ட ஈடு தர வேண்டியுள்ளது. எந்த அடிப்படையில் எடப்பாடி அரசு வெறும் 15 ஆயிரம் கோடியை நிதி உதவியாக கோரியது என்பதே புரியவில்லை.
மத்திய அரசு கொடுக்கிறதா இல்லையா என்பது இரண்டாவது பட்சம். முதல் கட்டமாக தமிழக அரசு நியாயமான கோரிக்கை வைக்கவில்லை. இது கண்துடைப்பாக உள்ளது.
தமிழ்நாடு முழுக்க மே 17 இயக்கத்திற்கு கடுமையான அடக்குமுறைகளை பரிசளிக்கிறார்கள். எங்குமே கருத்தரங்குகள் நடத்துவது, கூட்டம் நடத்துவதற்கு அனுமதிப்பது கிடையாது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று தான் நிகழ்ச்சிகளை நடத்தும் நிலையில் உள்ளோம். இதை வைத்துப் பார்த்தால் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறதா என்று சந்தேகம் எழுகிறது. சர்வாதிகார ஆட்சி மாதிரி உள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
5 மாநில தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. மக்கள் அந்த கட்சியை புறக்கணிக்க தொடங்கிவிட்டனர். இன்னமும் அதிமுக அரசு அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்பட்டால் மக்கள் இவர்களை ஒதுக்கி விடுவார்கள். இவ்வாறு தெரிவித்தார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications