ஜெயக்குமார் ஆடியோவுக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமுமில்லைங்க- தங்கதமிழ்ச்செல்வன்
Recommended Video

நெல்லை: அமைச்சர் ஜெயக்குமார் மீது அவதூறு கூறும் வகையில் வாட்ஸ் ஆப்பில் ஆடியோ ஒன்று உலா வருவதற்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
மீ டூ விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ் ஆப் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நன்கு தெரியும்
இந்த ஆடியோ குறித்து அமைச்சர் கூறுகையில், தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எப்படியாவது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவில் இந்த போலி ஆடியோவை வெளியிட்டுள்ளனர். இதை யார் செய்திருப்பார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும்.

கிரிமினல்
ஒளிந்து கொண்டே கிரிமினல் வேலை செய்வதில் டிடிவி தினகரன் கில்லாடி. அப்படித்தான் அவரது ஆதரவாளர்களை தற்போது குற்றாலத்தில் ஒளித்து வைத்துள்ளார் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

2 நாட்கள்
இந்நிலையில் குற்றாலத்தில் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் 20 பேர் சென்றுள்ளனர். அங்கு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தாமிரபரணி மகாபுஷ்கர திருவிழாவில் புனித நீராடி விட்டு குற்றாலத்தில் ஓய்வெடுப்போம். 2 நாள் குற்றாலம் ரிசார்ட்டில் தங்கி விட்டு 3வது நாள் சென்னைக்கு சென்று விடுவோம்.

முதல்வர் உத்தரவு
அதன்பின் அவர், ஜெயக்குமார் ஆடியோவுக்கும், டி.டி.வி. தினகரனுக்கும் எந்த சம்பந்தமில்லை. அமைச்சர் குற்றமற்றவர் என்றால் உண்மையை கண்டுபிடிக்க முதல்வர் உத்தரவிட வேண்டியதுதானே என கூறினார்.












Click it and Unblock the Notifications