கொன்றது யார்.. ஏன்.. ஒரு துப்பும் கிடைக்கவில்லை.. உமா மகேஸ்வரி கொலையில் விழி பிதுங்கும் போலீஸ்
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை விசாரணை தீவிரமாகி உள்ளது
Recommended Video
நெல்லை: முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலையில் ஒரு துப்பும் கிடைக்காமல் போலீசார் 3-வது நாளாக விழி பிதுங்கி போயுள்ளனர்.
நெல்லையின் முதல் பெண் மேயராக திமுகவின் உமா மகேஸ்வரி பொறுப்பு வகித்தார். இதைதவிர அவர் திமுக மாவட்ட மகளிரணி பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் அவர் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உமா உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசந்திரன், வீட்டு வேலைக்கார பெண் மாரி ஆகிய 3 பேரையும் ஒவ்வொரு ரூமில் வைத்து கம்பி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும் வீட்டில் 10 பவுன் நகை, மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

நோட்டீஸ்
கொலையாளிகளை உடனே பிடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதால் பரபரப்பு அதிகமானது. மேலும் தலித் மற்றும் ஆதிவாசி பட்டியலின ஆணையம் 3 நாளில் இதை பற்றி பதிலளிக்குமாறு தமிழக டிஜிபிக்கும், மாவட்ட காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் விசாரணையை இன்னும் தீவிரமாக்கி விட்டது.

தீவிரம்
இதையடுத்து 3 நாளாகவே காவல்துறை அதிகாரிகள் கொலையாளிகளை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கி வருகின்றனர். முன்விரோதமா, சொத்துக்காகவா, அரசியல் விரோதமா, நகை, பணத்துக்காகவா என்ற ரீதியில் விசாரணை ஆரம்பமானது.

3 தனிப்படை
உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்ததில் உமா மகேஸ்வரி கழுத்தில் 6 இன்ச் ஆழத்துக்கு கத்தியால் குத்தி... கொடூரமாக திருகி கொலை செய்துள்ளதாக ரிப்போர்ட் வந்துள்ளது. இதனால் முதல் வேலையாக கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

வடமாநிலத்தவரா?
70 பேரிடம் விசாரணையை போலீசார் ஆரம்பித்தனர். இதன்பிறகுதான் அப்படியே 50 பேர், 40 பேர் என சுருங்கி, தற்போது 4 ஆண்கள், 3 பெண்கள் என 7 பேர் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் உள்ளனர். இதை தவிர அந்த பக்கம் சுற்றி திரிந்த 2 பேரையும் சந்தேகத்தின்பேரில் விசாரித்து வருகிறார்கள். சினிமா பாணியில் நடந்த இந்த கொலையை பார்த்தால் வடமாநில கொலையாளிகள் ஈடுபட்டிருக்கலாமோ என்ற ரீதியில் ஒரு பக்கம் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

திணறல்
வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாதது பெரிய மைனஸாக உள்ளது. ஆனால் கொலையாளிகள் உமா மகேஸ்வரி குடும்பத்திற்கு ரொம்ப தெரிந்தவர்களாகத்தான் இருக்கும் என்கிறார்கள் போலீசார். ஏனெனில் வந்தவர்கள் வீட்டின் ஹாலில் உட்கார்ந்து தண்ணீர் குடித்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதாம். இருந்தாலும் கொலையாளிகள் பற்றின எந்த துப்புமே கிடைக்காமல் 3-வது நாளாக போலீசார் திணறி வருகிறார்கள்!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications