Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாவு மகனுக்கு பதவி.. திமுக நிர்வாகி ராஜினாமா.. நெல்லை செல்லும் ஸ்டாலினுக்கு சென்ற ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நெல்லை செல்லவுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், அரசியல் ஆலோசனைகளில் ஸ்டாலின் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் விசிட்டிற்கு முன்னதாக நெல்லை மாவட்டத்தின் முக்கிய நிர்வாகி தன்னுடைய பதவியில் இருந்து விலகியிருப்பது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 20, 21 தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரியவுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, 20 ஆம் தேதி மதியம் தூத்துக்குடி விமான நிலையம் வரவுள்ளார். அங்கு அவருக்கு திமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பளிக்க திட்டமிட்டுள்ளனர். அங்கிருந்து ஸ்டாலின் கார் மூலம் நெல்லை செல்கிறார்.

tirunelveli-dmk-cadre-resign-his-post-key-dmk-cadre-resigned-his-post-from-nellai

ஸ்டாலின் நெல்லை விசிட்

அன்றைய தினம் மாலை தென்னிந்திய திருச்சபை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார். பிறகு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கவுள்ளார். 22 ஆம் தேதி காலை ரூ.56.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன் பிறகு அரசு பன்னோக்கு மருத்துவனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்.

22 ஆம் தேதி மாலை அவர் விமானம் மூலம் சென்னை செல்லவுள்ளார். ஸ்டாலினின் நெல்லை விசிட்டில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும் முக்கியமாக ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். மேலும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் முதலமைச்சரின் திருநெல்வேலி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முக்கிய நிர்வாகி ராஜினாமா

ஸ்டாலின் வருகைக்கான ஏற்பாடுகளில் திமுக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். யாரும் எதிர்பாராத வகையில் முக்கிய நிர்வாகி பதவி விலகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக இருந்தவர் ஏ.ஆர். ரகுமான். ராதாபுரம் தொகுதியில் பரபரப்பாக செயல்பட்டு வந்த ரகுமானின் விலகல் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதவியில் இருந்து ராஜினாமா செய்வது தொடர்பாக ரகுமான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், "திமுகவுக்காக கடுமையான உழைப்பை செலுத்தியிருக்கிறேன். நிறைய பணத்தையும் செலவு செய்துள்ளேன். சொந்த செலவில் கட்சி சார்பாக ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்துள்ளேன். ஆனால் நான் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் கட்சியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறேன்.

தொடர்ந்து புறக்கணிப்பு

மாவட்ட நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் என்னை புறக்கணித்து வருகிறார்கள். கட்சி நிகழ்வுகளில் என்னை ஒதுக்கி வருகிறார்கள். எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைப்பதில்லை. என் சொந்த ஊரில் நடைபெறும் நிகழ்வில் கூட என்னை அழைப்பதில்லை. எனது பணியை பார்த்து பல ஆயிர கணக்கானோர் என்னை பின் தொடர்கிறார்கள். தொடர்ந்து புறக்கணிப்பதால் வர்த்தக அணி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்." என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து நெல்லை திமுக நிர்வாகிகள் கூறுகையில், "ரகுமான் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். சமீபத்தில் மாவட்டத்தை இரண்டாக பிரித்தனர். புதிய மாவட்ட செயலாளராக கிரகாம்பெல் என்பவர் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு கிரகாம்பெல் வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தார். கிரகாம்பெல் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவரின் ஒன்றிய செயலாளர் பதவி தனக்கு வரும் என ரகுமான் எதிர்பார்த்தார்.

ஏமாற்றம்

ஆனால் ஒன்றிய செயலாளர் பதவி சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ்க்கு வழங்கப்பட்டது. கடைசிக்கு அலெக்ஸ் வகித்து வந்த மாணவரணி அமைப்பாளர் பதவியாவது தனக்கு வழங்கப்படும் என ரகுமான் எதிர்பார்த்தார். அந்தப் பதவியும் ரகுமானுக்கு வழங்கப்படாததால் அவர் தன் கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார்." என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+