திருநெல்வேலியில் விழுந்த பச்சைக்கிளி.. நெல்லை கலெக்டர் ஆபீஸில் ஒரே மகிழ்ச்சி! சபாஷ் பாலசுப்பிரமணியன்
திருநெல்வேலி: நெல்லையில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் போலீஸ்காரர் பாலசுப்பிரமணியத்துக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
தற்போது வெயில் அதிகரித்து காணப்படுகிறது.. இந்த வெயிலுக்கு தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.. தொடர்ந்து உயிரிழப்புகளும் நடந்து கலக்கத்தை தந்து வருகிறது.
கடும் வெயில்: அதுவும், இப்போது கத்திரி வெயில் துவங்கிவிட்டதால், பகல் நேரங்களில் வெளியே வரவே முடிவதில்லை.. அந்தவகையில், நெல்லையிலும், வெயில் வாட்டி எடுத்து வருகிறது.. 106 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. நேற்றுகூட 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது.

எனவே, வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் நிறைய அட்வைஸ்களை தந்துவருகிறது.. பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படாதவாறு பல்வேறு இடங்களில் உப்பு-சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது.. ஆங்காங்கே நீர்மோர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது..
பச்சைக்கிளி: இந்நிலையில், நேற்றைய தினம், நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயல் பகுதியில், ஒரு பச்சைக்கிளி பறந்துவந்து தரையில் விழுந்தது.. வெயிலுக்கு பறக்க முடியாமல், வெயிலில் சுருண்டு, பச்சைக்கிளி மயங்கி விழுந்துவிட்டது..
கலெக்டர் அலுவலகம் வாசலில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன் இந்த கிளியை பார்த்து பதறிவிட்டார்.. உடனே ஓடிவந்து, அந்த கிளியை எடுத்து சென்று, அங்குள்ள குடிநீர் தொட்டியின் மீது வைத்தார்.. சிறிது தண்ணீர் எடுத்து கிளி மீது தெளித்தார்... பருகுவதற்கு தண்ணீரும் கொடுத்தார்..
இதையடுத்து அந்த கிளி மெல்ல கண் விழித்தது.. சிறிது நேரம் தண்ணீர் தொட்டி மீது உட்கார்ந்திருந்தது.. தன்னை மெல்ல மெல்ல ஆசுவாசப்படுத்தி கொண்டது. அப்போது, பொரிகடலையை எடுத்து வந்து அங்கிருந்த போலீசார் தந்தார்கள்.. அதையும் ஆறஅமர பச்சைக்கிளி சாப்பிட்டது.. பிறகு, ஓரளவு தெம்பி கிடைத்ததுமே, அங்கிருந்து பறந்து சென்றுவிட்டது..
பாராட்டு: வெயிலில் மயங்கிய பச்சைக்கிளிக்கு தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்திய இந்த சம்பவத்தை பார்த்து, கலெக்டர் ஆபீசுக்கு வந்திருந்தவர்கள் அனைவருமே நெகிழ்ச்சியடைந்தனர்.. கிளி பறந்துபோவதை பார்த்துமே, எல்லாரும் மகிழ்ச்சியடைந்தனர்.. பாசக்கார போலீஸ்காரர் பாலசுப்பிரமணியனுக்கும் பாராட்டை தெரிவித்தனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications