அவசரப்பட்ட தவெக நிர்வாகி.. விஜய் முதல்வராகவில்லையே என தீக்குளித்தவர் இறந்தார்.. சோக பின்னணி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: விஜய் முதல்வராக தாமதமானதால் மனம் உடைந்த 47 வயது தவெக நிர்வாகி கடந்த 9ம் தேதி தீக்குளித்தார். இதில தீக்காயமடைந்த அவர் நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் செட்டிக்குளம் அருகே உள்ள புதுமனை கிராமத்தை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 47). இவர் தவெக கட்சியில் செயல்பட்டு வருகிறார். இவர் புதுமனை கிராமத்தின் தவெக கிளை செயலாளராக இருந்து வந்தார்.

tvk tirunelveli

விஜய் எப்படியாவது தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நேர்த்திக்கடனாக உடலில் 16 அடி நீள வேல் குத்தி வேண்டுதல் செய்தார். இதன்மூலம் அவர் பிரபலமும் ஆனார்.

இந்நிலையில் தான், சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் கூட விஜய்யால் முதல்வராக முடியவில்லை. மெஜாரிட்டி கிடைக்காததால் அவர் முதல்வராக முடியாமல் இருந்தது. பிற கட்சிகளின் ஆதரவை கோிரனார். இதனால் கடந்த 4ம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளியானாலும் கூட நேற்று முன்தினம் தான் மெஜாரிட்டி பெற்று விஜய் முதல்வராக பதவியேற்றார்.

ஆனால் முன்னதாகவே விஜய் முதல்வராக முடியவில்லை என்று இசக்கியப்பன் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் தான் கடந்த 9ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மகாராஜபுரம் அருகே இசக்கியப்பன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதை பார்த்தவர்கள் அவரது உடலில் பிடித்த தீயை அணைத்து மீட்டனர். இருப்பினும் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இறந்துள்ளார்.

இதுபற்றி பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+