Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பா.ஜ.க நிர்வாகியை தி.மு.க எம்.பி ஞானதிரவியம் தாக்கியதாக புகார்.. அண்ணாமலை கடும் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே காவல்கிணறு விலக்கில் ஹோட்டல் ஓன்றில் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் என்பவர் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு திருநெல்வேலி தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மற்றும் ஆதரவாளர்கள் வந்தனர்.

ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரனை தாக்கியதாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டுகின்றனர். ஹோட்டலில் இருந்த கேமராக்களையும் அவர்கள் அடித்து உடைத்து சென்று விட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன்

பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன்

இதில் காயம் அடைந்த பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பா.ஜ.க நிர்வாகி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அண்ணாமலை கடும் கண்டனம்

அண்ணாமலை கடும் கண்டனம்

பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் மீது தி.மு.க எம்.பி ஞானதிரவியம் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. தி.மு.க எம்.பி.க்களின் அராஜகம் தமிழக்தில் தலைவிரித்தாடுகிறது. கடலூர் திமுக எம்.பி ரமேஷ் என்பவர் மீது இப்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்திய ஞானதிரவியம் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்து காவல்துறை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கேட்டுக் கொள்கிறேன்.

ஆபத்தை விளைவிக்கும்

ஆபத்தை விளைவிக்கும்

அரசியல் அதிகாரம் என்பது நிலையில்லாதது. பிரியாணி கடை முதல் டீக்கடை வரை திமுகவின் அராஜகத்தை ரவுடியிசத்தை தமிழக மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் வன்முறை கலாசாரத்தில் ஈடுபடுகிறார்கள். ஆளும் கடசியாக வந்த பிறகும் இந்த பழக்கத்தை தொடருகிறார்கள். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களே இதுபோன்ற வன்முறை கலாசாரத்தை கையில் எடுப்பது தமிழத்தின் அமைதிக்கு மிக மிக ஆபத்தை விளைவிக்கும் என்பது உறுதி.

பொன் ராதாகிருஷ்ணன்

பொன் ராதாகிருஷ்ணன்

ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், பாஜக கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்க வேண்டியதிருக்கும் என்று காவல்துறைக்கு தெரிவித்துகொள்கிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். முன்னதாக பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரனை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+