தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி.. பைக் மீது மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி! நெல்லையில் சோகம்
நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சி அருகே உள்ள கரந்தை என்ற ஊரை சேர்ந்தவர் மாடசாமி. கட்டிட தொழிலாளியான இவருக்கு சரஸ்வதி (வயது 50) என்ற மனைவியும் இசக்கி ராஜ்(வயது 30) என்ற மகனும் உள்ளனர். இசக்கி ராஜ் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர்களது உறவினர் குழந்தை ஒன்றிற்கு காதணி அணியும் விழா காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெற்றது.

இதற்காக இசக்கிராஜ் தனது தாயார் சரஸ்வதி மற்றும் தங்கை கார்த்திகா இவருடைய மகன் சந்துரு ஆகியோரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு காரையாறுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது விக்ரமசிங்க புரத்தில் இருந்து அம்பை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி கோடாரங்குளம் விலக்கு அருகே வந்த போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் தாறுமாறாக தறிகெட்டு ஓடிய லாரி, இசக்கிராஜ் வந்து கொண்டு இருந்த பைக் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பைக் சிறிது தூரம் தூக்கி வீசப்பட்டது. இதில், பைக்கில் வந்த சரஸ்வதி, கார்த்திகா, குழந்தை சந்துரு ஆகியோரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இசக்கி ராஜ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த இசக்கிராஜை மீட்டு அம்பை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனளிக்காமல் இசக்கிராஜும் பலியானார். இந்த விபத்தையடுத்து லாரி டிரைவர் அசோக் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். விபத்தில் பலியானவர்களின் நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்தில் பலியான இசக்கிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இது அங்கு இருந்தவர்களின் கண்ணீரையும் குளமாக்கியது. விபத்தில் பலியான இசக்கிராஜ்-க்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்ததாம். அடுத்த மாதம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், இசக்கி ராஜ் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications