உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்கிறது.. நெல்லையில் விஜய் சொன்ன முக்கிய விஷயம்!
நெல்லை: உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் கணக்குகளை மக்கள் புதைத்துவிட்டதாக கூறிய விஜய், கரூர் விவகாரத்தின் போது என் மீது பழி போட்டார்கள் என்றும் கூறியுள்ளார். அதேபோல் ஜனநாயகனை முடக்கியதிலும் அரசியல் நடந்ததாக கூறிய விஜய், மக்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. முதற்கட்டமாக நெல்லையில் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது விஜய் பேசுகையில், திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் வெளியே வேண்டுமானால் தனித்தனியாக இருக்கலாம். ஆனால் உள்ளுக்குள் இரண்டு பேரும் ஒன்றுதான். இரண்டு பேருக்கும் ஒரே நோக்கம் தான். மக்களுக்கு நல்லது செய்ய விஜய் வந்துவிடக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம். விஜய் வந்ததில் இருந்து அவர்களால் ஊழல் செய்ய முடியாமல் போய்விட்டது. அதனால் என் மீது செம கோபத்தில் உள்ளனர்.
திமுகவின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து போய் இருக்கிறது. கூட்டணி கட்சிக்காரர்களே ஒருவருக்கு ஒருவர் வாக்கு போட மாட்டார்கள் போல.. இவர்கள் இப்படியென்றால்.. பாஜக தலைமையில் மற்றும் பலர்.. அவர்கள் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. திமுகவின் நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம் மீது காண்டு.
சில பல கோடிகளை கொடுத்து தமிழக காங்கிரஸ் கட்சியை ஸ்டாலின் பாக்கெட்டில் போட்டு கொண்டுள்ளார். ஆனால் உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்கிறது. சிறுபான்மை மக்களோட திமுகவின் சாயம் வெளுத்து போய்விட்டது. அதுவே திமுக, பாஜகவுக்கு என் மீது காண்டோ காண்டு. இது வெறும் தேர்தல் மட்டுமல்ல.. இதுவொரு எமோஷன்..
கரூர் விவகாரத்தில் என் மீது பழி போட்டார்கள்.. ஜனநாயகன் படத்தை முடக்கி பார்த்தார்கள்.. அதனை யார் முடக்கியது என்றே உங்களுக்கு தெரியும்.. ஆனால் திமுக, பாஜக மற்றும் பலராலும் என்னை மக்கள் கிட்ட இருந்து பிரிக்க முடியாது. 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர்.. நமது வேட்பாளர்களில் யாரும் அம்பானி, அதானி கிடையாது.
இப்படியொரு தேர்தலை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே பார்த்திருக்கிறது. ஒருவொரு அதிசய தேர்தல்.. 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடக்கும்.. ஒரு எம்ஜிஆர், ஒரு காமராசர், ஒரு அண்ணா மாதிரி யாரும் வர மாட்டார்களா? என்று நீங்கள் ஏங்குவது எனக்கு தெரியும். அதற்காக தான் தவெக வந்துள்ளது. நிச்சயமாக தவெக ஆட்சி அமைக்கும். நிச்சயமாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
-
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
Vijay: பெரம்பூரில் "5 ஜோசப் விஜய்" போட்டி! அப்படியே ஓபிஎஸ்ஸுக்கு நடந்தது மாதிரியே! -
15 வருடங்களுக்கு பின் அதிசயம்! காங்கிரஸின் ‘சர்ப்ரைஸ்’ சாய்ஸ் விஸ்வநாதன்! கக்கன் கால சென்டிமென்ட் -
பெரம்பூர், திருச்சி கிழக்கு, 2 தொகுதிகளிலும் விஜய்யின் வேட்புமனு ஏற்பு! பாமக எதிர்ப்பால் 30 நிமிடம் கெடு! -
திமுக ஒரே ஒரு சின்ன தோசை.. தவெக கல்யாண விருந்து குளோஸ்.. காங்கிரஸ் டீலிங் உடைத்த பிரவீன் சக்ரவர்த்தி -
எடப்பாடி தவெக வேட்பாளர் திடீர் மாயம்.. இபிஎஸ்ஸை எதிர்த்து களமிறங்கியவர் எங்கே? பெரும் பரபரப்பு -
லவ்வரை மிஸ் பண்ணுகிறேன்.. காதல் இல்லாத வாழ்க்கை! ஓபனாக திரிஷா போஸ்ட்! இப்படி சொல்லிட்டாங்களே! -
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம் -
வாயை விட்ட எடப்பாடி.. இறங்கி அடித்த ஸ்டாலின்.. விடாத அதிமுக.. காணாமல் போன தவெக விஜய்? -
1 மணி நேரம் போதாதா? இன்னும் 15 நாள்தான் இருக்கு.. விஜய்யும் தள்ளாடும் தமிழக வெற்றிக் கழகமும்! -
12 நாட்கள் விஜய்க்கு இப்படியொரு சிக்கல்? திமுக காபந்து அரசு தான் காரணமா? ஐவர் குழுவின் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications