கல்யாண வீட்டில் சரவெடி பட்டாசு.. பந்தல் தீப்பற்றி நாசம்.. டைனிங் டேபிள்களும் காலி
Recommended Video
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பாவூர்சத்திரம் அருகே திருமண வீட்டில் பட்டாசு வெடித்து அதனால் தீவிபத்து ஏற்பட்டு பந்தல், டைனிங் டேபிள் ஆகியவை தீப்பிடித்து கருகின.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் ஊரைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் பாவூர்சத்திரம் மற்றும் தென்காசியில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
இவரது மகன் பாண்டியன் தனது தந்தை செல்லதுரையுடன் சேர்ந்து கடையை கவனித்து வருகிறார். நேற்று இவருக்கும், அருகில் உள்ள ஊரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து நேற்று மாலையில் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சி முடிந்ததும் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். அப்பொழுது பட்டாசு வெடித்து சிதறியதில் பந்தலில் தீ பிடித்து எரிந்தது.
அத்துடன் அங்கிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. உடனடியாக சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அனைத்தனர். இதனால் பாவூர்சத்திரம் பகுதியில் அரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.