இது வேற லெவல்.. எப்படி இப்படி யோசிக்கிறாங்க? நெல்லை கலெக்டர் எடுத்த முடிவு.. குவியும் பாராட்டு
திருநெல்வேலி; நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எடுத்த முடிவு ஒன்று மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது.
தென் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்து உள்ளது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழை காரணமாக பாபநாசம் அருகேயுள்ள அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. அருவி பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் வெள்ளம்: வரலாறு காணாத மழையால் எல்லீங்க நாயக்கன்பட்டி - செங்கோட்டை கிராமங்களுக்கு இடையிலான தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் விருதுநகரில் விடிய விடிய பெய்த கனமழையால் சதுரகிரியின் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை தீயணைப்புத்துறையினர், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து கயிறுகள் மூலம் மீட்டனர். தூத்துக்குடியில் தொடர் கனமழையால் கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததால், 2000 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை தூத்துக்குடியில் இயல்பை விட 68%மும், திருநெல்வேலியில் 135%மும், கன்னியாகுமரியில் 103%மும், தென்காசியில் 80%மும் கூடுதலாக பதிவாகியுள்ளது.
( கொட்டும் மழையில்.. சரசரவென பஸ்ஸில் ஏறி.. கனிமொழி செய்த சம்பவம்.. தூத்துக்குடியில் துடிப்பு!)
ஸ்டாலின் ஆலோசனை: வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தை அடுத்து 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை செய்துள்ளார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் உத்தரவுகள் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை ஆட்சியர் முடிவு; இந்த நிலையில்தான் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எடுத்த முடிவு ஒன்று மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது.
அவர் வெளியிட்ட அறிவிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த 30 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 696 கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் சேர்க்க 17.12.2023 காலை முதல் அறிவுறுத்தப்பட்டு 6pm வரை அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 24 தாய்மார்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ளார்.
கடும் புயல் வெள்ளத்திற்கு இடையே.. இந்த விஷயம் பற்றி யோசித்தது.. கர்ப்பிணிகள் பற்றி யோசித்தது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆட்சியின் இந்த யோசனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஆட்சியர்கள் நியமனம்: தென் தமிழ்நாட்டில் பெய்யும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது தென் மாவட்டங்களை நோக்கி அதிகாரிகள் அனுப்பப்பட்டு உள்ளனர். அதேபோல் விரைவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தென் மாவட்டங்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர்.

கன்னியாகுமரி - திரு. சு. நாகராஜன் இ.ஆ.ப., நில நிர்வாக ஆணையர்.
திருநெல்வேலி- - டாக்டர் இரா. செல்வராஜ். இ.ஆ.ப., அரசு செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
தூத்துக்குடி - திருமதி.பா.ஜோதி நிர்மலா இ.ஆ.ப., அரசு செயலாளர். வணிகவரித் துறை
தென்காசி - திரு.சுன்சோங்கம் ஜதக் சிரு, இ.ஆ.ப., அரசு செயலாளர். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் அமைச்சர்கள், திமுக மூத்த தலைவர்களும் சிலரும் விரைவில் நெல்லையை நோக்கி விரைய உள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications