ஊருக்கு நடுவே ஒரு கொலை.. சமுதாய கூடத்தில் தலை.. நெல்லை அருகே பரபரப்பு
இளைஞரை கொன்று தலை தனியாக துண்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை: இளைஞர் ஒருவரின் தலை மட்டும் துண்டாகி தனியாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் தலைதெறிக்க ஓடிய சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.
மேலப்பாளையம் அருகே உள்ள ஊர் வீரமாணிக்கபுரம். இங்கு வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி மேலப்பாலாமடை என்ற ஊரை சேர்ந்தவர். இவர்களுக்கு 18 வயதில் பால்துரை என்ற மகன் உள்ளார்.
பால்துரைக்கு வேலை வெட்டி எதுவும் கிடையாது. அதனால் ஊரை சுற்றி வருவதே இவருக்கு பிழைப்பாக இருந்துள்ளது. அடிக்கடி தன் அம்மா வீட்டுக்கும் போய் வருவார்.

கூடத்தில் தலை
அப்படித்தான் மேலப்பாலமடைக்கு சென்றிருந்தார் பால்துரை. இந்நிலையில் இன்று காலை அந்த ஊருக்கு நடுவில் உள்ள சமுதாயக்கூடத்தில் ஒரு தலை மட்டும் துண்டித்து வைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் பார்த்து அலறி அடித்துகொண்டு ஓடினார்கள். இது சம்பந்தமாக சீவலப்பேரி போலீசுக்கு தகவல் பறந்தது.

பால்துரைதான்
அதனடிப்படையில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், தலை துண்டிக்கப்பட்டவர், பால்துரைதான் என தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

கதறி அழுத தாய்
பால்துரையின் தாயாரும் மகனின் தலையை கண்டு கதறி துடித்து அழுதார். இதையடுத்து பால்துரைதான் இறந்தது என்பதை உறுதி செய்த போலீசார், இது சம்பந்தமான விசாரணையை துவங்கி உள்ளனர்.

உடல் எங்கே?
பால்துரையை கொலை செய்தது யார்? எதற்காக தலையை துண்டித்து ஊருக்கு நடுவே போட்டு விட்டு போயிருக்கிறார்கள்? என்பது குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். அத்துடன், பால்துரையின் தலையை மட்டும் வைத்து கொண்டு, அவரது உடல் எங்கே இருக்கிறது என தேடி வருகிறார்கள்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications