கோயம்பேட்டில் இருந்து 32 கிமீ துரத்தில் 3 மதுக்கடைகள்.. குவிந்த சென்னைவாசிகள்..3ம் குளோஸ்
திருவள்ளூர்: சென்னைவாசிகள் அதிக அளவில் குவிந்தததால் திருவள்ளூர் மாவட்டத்தில் 3 மதுக்கடைகள் மூடப்பட்டது.
Recommended Video
சென்னையில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

ஆனால் சென்னையில் மட்டும் கொரோனா பரவின் வேகம் காரணமாக திறக்க அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் திறக்கப்படவில்லை. அரசு குறைந்த பட்சம் சென்னையின் இருந்து 50 கிலோமீட்டர் தள்ளி தான் மதுக்கடைகளை திறந்து இருந்தது.
அதாவது திருவள்ளூர், செங்கல்பட்டில் அல்லது ஸ்ரீபெரும்புதூர் அருகே அல்லது ஈசிஆர் சாலையில் கானத்தூரையும் தாண்டி திருப்போரூர் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம் கோயம்பேட்டில் 36 கிலோமீட்டர் தூரமுள்ள பென்னேரி பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சென்னையில் இருந்து யாரும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்று மது வாங்க கூடாது.மீறி சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் எனறு எச்சரித்தது. அதையும் மீறி பலரும் மதுவாங்க திருவள்ளூர் மாவட்டத்திற்கு குவிந்து வருகிறார்கள். இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளை தாண்டி சென்று மதுவாங்க குடிமகன்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
குறிப்பாக சென்னைக்கு மிக அருகே திறக்கப்பட்ட கடைகளாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போராக்ஸ், புதுவயல் தச்சூர் ஆகிய இடங்களில் உள்ள மதுக்கடைகளில் சென்னைவாசிகள் அளவுக்கு அதிகமாக குவிந்தனர். இதனால் இந்த மூன்று கடைகளும் இன்று மூடப்பட்டன. கோயம்பேட்டில் இருந்து வெறும் 32 கிலோ மீட்டர் தூரத்தில் திறக்கப்பட்டிருந்த கடைகளான இவை மொத்தமாக மூடப்பட்டுள்ளன. எனினும் இன்னும் சில கடைகள் பென்னேரியை தாண்டி உள்ள பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளிலும் சென்னை வாசிகள் குவிந்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை.
-
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
மன்சூர் அலிகான் வாயில் இருந்து என்ன எடுத்தார்? - வீடியோ தீயாகப் பரவிய நிலையில் அவரே கொடுத்த விளக்கம் -
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
சென்னையில் கண்டக்டர் இல்லாத தங்கரதம் அரசு பஸ்.. ஓஎம்ஆர் ரூட்டின் வரப்பிரசாதம்.. டிக்கெட் விலை ஹேப்பி -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications