சுழன்றடித்த சூறைக்காற்று.. திடீரென பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை.. பதறி அலறிய மக்கள்! ஒரே பரபரப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று சுழன்றடித்த காற்றால் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்தது. அப்போது பொதுமக்கள் பதறிப்போய் அலறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக வாட்டி வதைத்த கத்தரி வெயில் காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதனால் வெப்பத்தின் கோரப்பிடியில் சிக்கிய மக்கள் கொஞ்சம் நிம்மதியடைந்துள்ளனர். இந்நிலையில் தான் அவ்வப்போது லேசானது முதல் மிதமானது வரை சென்னை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் பெய்து வருகிறது.

அதன்படி இன்று மாலை சென்னையில் வானிலை சட்டென மாறியது. பலத்த காற்றுடன் சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் நன்றாக மழை பெய்தது. அதேபோல் சென்னையை சுற்றிய சில இடங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தின் சில இடங்களில் இன்று மாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், செங்குன்றம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. முன்னதாக சில இடங்களில் காற்று சுழன்று சுழன்று அடித்தது. இதனால் புழுதிகள் கிளம்பி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின.
இதற்கிடையே தான் பழவேற்காட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்னை மாநகர அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சுழன்று வீசிய சூறைக்காற்றுக்கு பஸ்சின் மேற்கூரை தாக்குப்பிடிக்கவில்லை. இதனால் திடீரென பஸ்சின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் பெயர்ந்து மேல்நோக்கி பறந்தது. இதனை பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இதனால் அவர்கள் அனைவரும் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் கூச்சலிட்டனர். இதையடுத்து டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். அவசரஅவசரமாக பயணிகள் கீழே இறங்கினர். அதன்பிறகு வேறு பஸ்சில் பயணிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே சென்னை மற்றும் அதனை புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேர வானிலை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என இன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications