பொதுமக்கள் இடையூறு செய்வதா?.. எல்லாத்தையும் முதல்ல எடுங்க.. கோபமடைந்த முதல்வர் ஸ்டாலின்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை தொடங்கி வைக்க வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்கும் விதமாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததால் அவர் கட்சியினரிடம் கோபமடைந்தார்.
ஆங்காங்கே அரசியல் கட்சிகள் சார்பில் பேனர் வைப்பதால் விபத்துகள் ஏற்பட்டு விபத்து நேரிடுவதும் பேனர் விழுந்து உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனால் பேனர் வைக்கும் அரசியல் கட்சிகளை நீதிமன்றங்கள் கண்டித்துள்ளன.
இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்துகிறது.

திருவள்ளூர் மாவட்டம்
இதன் தொடக்க விழா திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வந்தார். அவரை வரவேற்கும் விதமாக மாதவரம் ரவுண்டானா, புழல், காவாங்கரை, செங்குன்றம், வடகரை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான திமுக நிர்வாகிகள் திரண்டிருந்தனர்.

பேனர்கள்
பேண்டு வாத்திய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. சாலையில் ஆங்காங்கே பேனர்கள், கட்சிக் கொடிகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு இருந்தன. அதிகளவில் திரண்டிருந்த தொண்டர்களால் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, ஜிஎன்டி சாலை, 100 அடி சாலை உள்ளிட்டவற்றில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
காலையில் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு பேனர் வைத்த தகவல் கிடைத்தது. இதனால் அவர் கோபமடைந்தார். ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு வரும் போது அரசியல் விழா போல வரவேற்பு அளிக்கக் கூடாது என உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் மூலம் அவசர அவசரமாக சாலையில் மக்களுக்கு இடையூறாக இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

கோபம்
இந்த கோபத்தில் வரவேற்க காத்திருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் எதையும் பேசாமல், கையசைக்காமல் முதல்வர் ஸ்டாலின் பள்ளி நிகழ்ச்சிக்கு சென்றார். இதனால் நிர்வாகிகளும் தொண்டர்களும் வேதனை அடைந்தனர். மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகளுக்கு பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications