Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவுன்சிலர் கனவில் மத்திய அரசுப் பணிக்கு விருப்ப ஓய்வு! அரசியல் ஆசையில் திமுக வேட்பாளரின் பலப்பரீட்சை!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் மத்திய அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு திமுக சார்பில் கவுன்சிலர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் ஒருவர்.

நிரந்தரமாக மாத வருமானம் அளித்துக்கொண்டிருந்த மத்திய அரசுப் பணியை துறந்துவிட்டு அரசியல் பலப்பரீட்சையில் இறங்கியிருக்கிறார் அவர்.

இதனால் தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள அவர் திருவேற்காடு 8-வது வார்டில் பம்பரமாக சுழன்று வருகிறார்.

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் மூர்த்தி, தனது மத்திய அரசுப் பணியை ராஜினாமா செய்திருக்கிறார். அரசுப் பணி கிடைக்காதா என லட்சக்கணக்கானோர் ஏங்கி வரும் சூழலில், கிடைத்த அரசுப் பணியை அரசியலுக்காக உதறியிருக்கிறார் அவர்.

வேட்புமனுத் தாக்கல்

வேட்புமனுத் தாக்கல்

திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்த மூர்த்தி, 8-வது வார்டு மக்கள் தன்னை நிச்சயம் வெற்றிபெற வைப்பார்கள் என மிகுந்த நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். திருவேற்காடு நகராட்சியில் திமுக அதிக இடங்களை வெல்லும் பட்சத்தில் மத்திய அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டுள்ள மூர்த்தி நகர்மன்ற தலைவராக வருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல இடங்களில்

பல இடங்களில்

திருவேற்காட்டில் திமுக வேட்பாளராக மூர்த்தி களமிறங்கியிருப்பதை போல் தமிழகத்தின் பல இடங்களில் இதேபோன்று பலரும் தங்கள் பணிகளை உதறிவிட்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் அரசியல் என்ட்ரி கொடுத்திருக்கின்றனர். குன்னூரில் சாஃப்ட்வேர் இன்ஞ்சினியராக பணியாற்றிய இளைஞர் ஒருவர் இதே பாணியில் தமது வேலையை துறந்துவிட்டு அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு நிற்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நகராட்சி

முக்கிய நகராட்சி

திருவேற்காட்டை பொறுத்தவரை தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றாகும். திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால் இந்த நகராட்சியில் வளர்ச்சித் திட்டங்களுக்கு குறைவிருக்காது. இதனால் நகர்மன்ற தலைவர் பதவியை பிடிக்க திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+