ஆ..ஊன்னா வருமான வரித்துறையை ஏவுவதா? பிபிசி மீதான நடவடிக்கைக்கு தி.க. கடும் கண்டனம்
பிபிசி அலுவலகத்தில் வருமான வரி ஆய்வுக்கு தி.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர்: பிபிசி ஊடகம் மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்கு திராவிடர் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் அரக்கோணத்தில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது: மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சி, இன்றைக்குப் பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாவற்றையுமே தம்முடையதாகக் கையகப்படுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது என்பதற்கு அடையாளம் - யார் யாரெல்லாம் உண்மைகளைச் சொல்லுகிறார் களோ அல்லது தங்களுக்கு எதிரான மாறுபட்ட கருத்துகளைச் சொல்லுகிறார்களோ அவர்களுடைய பேச்சு, எழுத்து சுதந்திரத்தைப் பறித்து, குரல் வளையை நெரிக்க வேண்டும் என்ற அளவிலேதான் இதை பிபிசி மீதான நடவடிக்கையை எடுத்துக்கொள்ள வேண்டும். பி.பி.சி., குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தைப்பற்றி ஆவணப் படமாக வெளி யிட்டது என்று சொன்னால், அதை மறுத்து இவர்கள், அவர்கள்மீது வழக்குப் போடலாம்; அல்லது அது உண்மையில்லை என்பதற்கு இவர்கள் தரப்பில் விளக்கம் சொல்லலாம்.

ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு, பி.பி.சி. நிறுவனத்தின்மீது வருமான வரித் துறையை ஏவி விடுகிறார்கள். இது அவர்களின் பலகீனத்தைத்தான் காட்டுகிறது. எதிர்க்கட்சிகளின்மீது வருமான வரித் துறையை ஏவிவிடுவது, அவர்களுடைய கருத்து களுக்கு யார் மாறுபடுகிறார்களோ அவர்களின் பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் பறிமுதல் போன்றவை இருந்தால், இவை அத்தனைக்கும் பதில் சொல்லவேண்டிய காலம்தான் 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். இதற்கு சரியான பதிலை மக்கள் அளிப்பார்கள்.
நீண்ட காலமாக, நாடாளுமன்றம் கையகப் படுத்தப்படுத்தப்பட்டு விட்டது. போதுமான அளவிற்கு, தெளிவாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை. சட்டமன்றங்களிலும் அப்படிப்பட்ட சூழல்கள்தான் இருக்கின்றன; பத்திரிகை உலக மும் அப்படி இருக்கிறது. இன்னுங்கேட்டால், இனிமேல் வரக்கூடிய ஓர் ஆட்சி - ஒன்றியத்தில் அமைந்தால், வரு மான வரித் துறை, அமலாக்கத் துறை, சி.பி.அய். போன்றவை சுதந்திரமாக, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இயங்கக்கூடிய ஒரு திட்டத்தை அறிவிக்கவேண்டும் - அரசியல் கட்சிகள் இணைந்து இதற்கொரு முடிவு காணவேண்டும். இப்படி கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந் திரம் இல்லாதவர்கள் - நேரிடையாக சந்திக்க முடியாதவர்கள் - இந்த ஆயுதங்களை ஏவி விடு கிறார்கள் - இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள்.

ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு, சில கட்சிகள் காணா மல் போகும்; சில கட்சிகளை அடமானம் வைத்தவர்கள், அதை மீட்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உணர் வார்கள். ஈரோடு ஒரு திருப்பமாக இருக்கும். எப்பொழுதுமே ஈரோடு திருப்பத்தை உரு வாக்கக் கூடிய தத்துவம் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு கி.வீரமணி கூறினார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications