கமல்ஹாசன் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை.. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கமல்ஹாசன் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள், நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். கடந்தாண்டு நடந்த கிராம சபை கூட்டத்தில், விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.

சாலையை சீரமைத்தல், தெரு விளக்கு பராமரித்தல், குப்பைகளை அகற்றுதல், சீரான குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் அதே போல், பகுதி நேர ரேஷன் கடைக்கு நிரந்தர கடை வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தநிலையில், தண்ணீர் சேமிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை என்றும், ஒரு குடம் தண்ணீர் ரூ.10 க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் கிடைப்பதில் கூட சிரமம் உள்ளதாக புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டத்தை கலைந்து போக செய்தனர். கமல்ஹாசன் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமம் முன்மாதிரியாக திகழும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வருவதாக, அப்பகுதி மக்கள் முணுமுணுத்து கொண்டனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications