நீட் தேர்வு தோல்வியால் சென்னை மாணவி தற்கொலை.. பெற்றோர் அதிர்ச்சி.. தொடரும் சோகம்!
திருவள்ளூர்: நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வால் இதுபோன்ற தொடர் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருவது, பெற்றோர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நீட் தேர்வால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தொடங்கி நீட் தேர்வு தொடர்பான மரணங்கள் தொடர் கதையாகி வருகிறது. நடப்பாண்டில் மட்டும் சென்னையைச் சேர்ந்த தனுஷ், ஓசூரைச் சேர்ந்த முரளிகிருஷ்ணா, அரியலுர் மாணவி நிஷாந்தி மற்றும் தென்காசி மாணவி ராஜலெட்சுமி என நீட் தேர்வு மரணங்கள் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் மாணவ, மாணவிகள் தற்கொலைக்கு தூண்டி வரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் கிராமப்புற மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவை, நீட் தேர்வு சிதைத்து வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ், சித்தா, யுனானி, ஆயுர்வேதம், நர்சிங் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு, கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. சுமார் 18.72 லட்சம் பேர் தேர்வில் விண்ணப்பித்த நிரைலயில், 95% பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
இந்நிலையில், சென்னை அம்பத்தூர் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி லஷனா ஸ்வேதா என்ற மாணவி, நீட் தேர்வில் தோல்வியடைந்தார். இதனால், நீட் தேர்வு தோல்வியால் தனது மருத்துவக் கனவு கலைந்துவிட்டதாக எண்ணி சோகத்தில் இருந்துள்ளார். கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி லஷனா ஸ்வேதா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வு தோல்வியால் மகள் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மகளை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளே, தேர்வில் தோல்வியடைந்த சென்னை மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெற்றோர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications