அமைச்சர் உத்தரவிட்ட பணியை நிறுத்திய திமுக மாவட்ட பொறுப்பாளர்..போனில் மிரட்டல்- கட்சிக்குள் சலசலப்பு!
திருவள்ளூர்: அமைச்சர் காந்தி உத்தரவிட்டிருந்த பணிக்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை ஏரி உபரி நீரை திருவள்ளூர் மாவட்டம் வீரமங்கலம் ஏரிக்கு கொண்டு வருவதற்காக கால்வாயை தூர்வார அமைச்சர் தன்னைக் கேட்காமல் உத்தரவிட்டதால் மாவட்ட பொறுப்பாளர் பூபதி அதிருப்தி அடைந்துள்ளார்.
இதையடுத்து அமைச்சர் போனில் பேசி மிரட்டிய நிலையில், தூர்வாரும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராணிப்பேட்டை ஏரி
ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக இருப்பவர் ஆர்.காந்தி. இவர் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில், ராணிப்பேட்டை பொன்னை ஏரி நிரம்பியதும், தண்ணீர் ஆந்திராவிற்குச் செல்கிறது. அதை செட்டிவாரிப்பள்ளி வழியாக கால்வாய் அமைத்து திருவள்ளூர் மாவட்டம் வீரமங்கலம ஏரிக்கு கொண்டு செல்ல அமைச்சர் ஆர்.காந்தி திட்டமிட்டுள்ளார்.

அமைச்சர் காந்தி உத்தரவு
இதற்காக, நீர்வளத்துறை அமைச்சரிடம் சொல்லிவிட்டு, துறை அதிகாரிகளிடம், கால்வாயை தூர்வார உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் சொன்னதும் அதிகாரிகளும் விரைந்து இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் திருவள்ளூர் தி.மு.க மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் பூபதி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என்னிடமே சொல்லாமல் என் மாவட்டத்தில் எப்படி தூர்வாரலாம் என அதிகாரிகளிடம் கோபப்பட்டுள்ளார்.

கொதித்த அமைச்சர்
தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் எகிறியதால் பயந்துபோன செயற்பொறியாளர் இதுகுறித்து அமைச்சர் காந்தியிடம் தெரிவித்துள்ளார். உடனே, மாவட்ட பொறுப்பாளருக்கு போன் செய்த அமைச்ச காந்தி, "என் தொகுதியில இருந்து தண்ணீரை திறக்க நான் உத்தரவிட்டிருக்கேன். நீ எப்படி அதிகாரிகளை மிரட்டலாம். மேலிடத்தில் சொல்லி பதவியை விட்டே தூக்கிடுவேன்" என கொதித்துள்ளார்.

மீண்டும் பணிகள்
அமைச்சர் டென்ஷனாகி கத்தியதால் பயந்துபோன மாவட்ட பொறுப்பாளர், ஒரு வார்த்த சொல்லியிருக்கலாம். யார் பண்றதுனு தெரியாமத்தான் அதிகாரிகள்கிட்ட கேட்டேன் எனப் பம்மியுள்ளார்.
இதையடுத்து மீண்டும் தூர்வாரும் பணிகளில் ஜரூராக நடைபெற்று வருகின்றன. மாவட்டம் விட்டு மாவட்டம் தி.மு.கவில் மோதல் ஏற்பட்டதால் திருவள்ளூர் தி.மு.கவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications