பாதுகாப்பு கருதி பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல தடை! ஏன் என்னாச்சு?
திருவள்ளூர்: ஸ்ரீஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி எஃப் 14 என்ற ராக்கெட்டில் இன்சாட் 3 டிஎஸ் என்ற வானியல் முன்னறிவிப்பு செயற்கைகோள் இன்று (பிப்.17) செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்றைய தினம் இன்சாட் 3 டிஎஸ் என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. வானியல் முன்னறிவிப்புகளுக்காக ஏற்கெனவே இரு செயற்கைகோள்கள் செலுத்தப்பட்டு பணியாற்றி வரும் நிலையில் பேரிடர்களை துல்லியமாக கணிக்கும் வகையில் இன்சாட் 3 டிஎஸ் என்ற செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ள இந்த ராக்கெட்டுக்கான 27 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் (பிப். 16) 2.30 மணிக்கு தொடங்கியது.
இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் , ராக்கெட் பாகங்களை அசம்பிள் செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் "ஸ்ரீஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி பழவேற்காடு மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுக்கான இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப் 14 (GSLV F 14) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications