ஆஹா..அடுத்தது இவரா...! ஆறுகளை புனரமைக்கும் பணியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
திருவள்ளூர்: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றை புனரமைக்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார்.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வாழும் கலை அமைப்பானது இந்தியா மட்டுமன்றி சர்வதேச அளவில் தனது கிளைகளை கொண்டுள்ளது. அதன் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பிறந்தவர். யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உலகம் முழுவதும் தனது அமைப்பின் மூலம் வழங்கி வரும் ரவிசங்கர், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தில் ஏற்கனவே காவிரி கூக்குரல் என்ற பெயரில் காவிரி ஆற்றுப்படுகையில் மரம் நடும் திட்டத்தை முன்வைத்து ஜக்கி வாசுதேவ் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த வரிசையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் இணைகிறார். இவர் கையில் எடுத்திருக்கும் ஆற்றின் பெயர் கொசஸ்தலை ஆறு. இது தமிழக ஆந்திர எல்லையில் தொடங்கி மொத்தம் 140 கி.மீ தூரம் பயணித்து எண்ணூரில் கடலில் கலக்கிறது.
கொசஸ்தலை ஆறு கழிவுகளால் மாசடைந்து வருவதாக புகார் எழுந்ததை அடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக சென்று அந்த ஆற்ரை பார்வையிட்டார். அனல் மின் நிலைய சாம்பல்களாலும், கழிவுகளாலும் ஆறு மாசடைந்துவிட்டதாக அப்போது பொதுமக்கள் புகார் கூறினர்.

இந்நிலையில், இன்று காலை கொசஸ்தலை ஆறு புனரமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், பின்னர் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை சாமியார்களும், எதிர்க்கட்சியினரும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications