லட்சுமி பாதம் அடைவதற்காக 4 பேர் தற்கொலை.. திருவண்ணாமலை கிரிவலப்பாதை விடுதியில் திக் திக்
திருவண்ணாமலை: லட்சுமி பாதத்தை அடைய வேண்டும் என்பதற்காக தற்கொலை என்று டைரியில் எழுதி வைத்துவிட்டு, திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள விடுதியில் சென்னை வியாசர் பாடியைச் சேர்ந்த ஆண், தாய், மகள், மகன் உள்பட 4 பேர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் சிவனை தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். திருவண்ணாமலைக்குச் சென்றாலே முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். திருவண்ணாமலையில் பெளர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலமாக வந்து செல்வார்கள்.

வெளி மாவட்டடங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையைச் சுற்றி ஏராளமான விடுதிகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிரிவலப்பாதையில் சூரியலிங்கம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இன்று காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் அறையைவிட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், அறையின் கதவை தட்டிப் பார்த்துள்ளனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. பயந்துபோன ஊழியர்கள் அறையின் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது 4 பேரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 2 ஆண், 2 பெண்கள் சடலமாக கிடந்தது தெரியவந்தது. 4 பேரின் சடலங்களுக்கு அருகே சயனைடு பாட்டில் இருந்துள்ளது. இதனால் அந்த 4 பேரும் சயனைடு குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, 4 பேரின் சடலங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில் அந்த 4 பேரும், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண், 48 வயது மதிக்கத்த தாய், அவரது 17 வயது மகன், 15 வயது மகள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நேற்று ஆன்லைன் மூலம் அறையை முன்பதிவு செய்து வந்து தங்கியுள்ளனர். அவர்களிடம் இருந்த கடிதம் மற்றும் தற்கொலை குறித்து செல்போனில் பதிவு செய்த வீடியோவை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த குறிப்பில், 4 பேரும் ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு உள்ளவர்கள் என்று குறிப்பிட்டு இறைவனை தேடிச் செல்கிறோம் என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications