திருவண்ணாமலை கோயிலுக்கு திடீர்னு வந்த ரோஜா.. கிரிவலம் சென்ற நடிகையின் பின்னால் போவது யார் பாருங்க
திருவண்ணாமலை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகியும் நடிகையுமான ரோஜா செல்வமணி இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பயபக்தியுடன் சாமி கும்பிட்ட ரோஜாவிற்கு ஆள் உயர மாலையை அணிவித்தனர். அங்கு வந்த பக்தர்கள் பலர், ரோஜா உடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினார்கள்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் என்பது இந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற சிவன் கோவில்களில் ஒன்று. தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற சிவாலயமாக இருக்கிறது. இந்த கோயிலுக்கு நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். தமிழ்நாட்டில் இருந்து மட்டுமில்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் என பல மாநிலத்தவர்கள் வந்து செல்கிறார்கள்.

ஆந்திராவில் பிரபலம்
இதில் குறிப்பாக ஆந்திரா தெலுங்கானாவைச் சேர்ந்த பலரும் நாள்தோறும் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கு எப்படி தமிழர்கள் அதிக அளவில் செல்கிறார்களோ, அந்த அதேபோன்று அண்மைக்காலங்களில் திருவண்ணாமலை கோவிலுக்கு தெலுங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். ஆந்திராவில் உள்ள யூடியூபர்களின் விலாக்ஸ் காரணமாக முன்பைவிட இப்போது திருவண்ணாமலைக்கு வருவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரோஜாவுக்கு மரியாதை
இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகியும் நடிகையுமான ரோஜா செல்வமணி இன்று திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வருகை தந்தார். அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அவர் கோவில் பிராகரத்தை சுற்றிவந்த நிலையில், ராட்சத மாலை ஒன்றை அணிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர், கோவிலில் அண்ணாமலையாரை பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
அவருக்கு பக்தர்கள் சிலர் புத்தகம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்கள். அதனை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். சிலர் ரோஜா உடன் செல்பி எடுக்கவும், ஓடிச்சென்று கைகொடுக்கவும் ஆர்வம் காட்டினார்கள். அவர்களை புன்னகையுடன் வரவேற்று செல்பிக்கு போஸ் கொடுத்தார். தொடர்ந்து சாமி கும்பிட்ட பின்னர் அங்கிருந்து ரோஜா புறப்பட்டு சென்றார்.
விஜய்க்கு அறிவுரை
முன்னதாக நடிகை ரோஜா சென்னையில் பேட்டி அளிக்கையில் நடிகர் விஜய் பவன் கல்யாண் போல் டைம் பாஸ் பாலிடிக்ஸ் செய்யாமல், ஃபுல் டைம் பாலிடிக்ஸ் செய்ய வேண்டும் என்றும். எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் போல விஜய் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார் நடிகர்கள் கட்சி தொடங்கினால் தன் பின் இருக்கும் தொண்டர்களுக்காக கடைசிவரை சண்டை போட வேண்டும் என்றும் கூறினார்.
இப்போது சினிமாவில் இருந்து வருபவர்கள் டைம் பாஸ் பாலிடிக்ஸ் செய்து வருகிறார்கள் என்றும் சினிமாவில் இருந்து வருபவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் சினிமாவில் இருந்து வருபவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றும் கூறினார். சினிமா ஆர்ட்டிஸ்ட் பப்ளிசிட்டி உள்ளது என்றும், அதனால் அவர்கள் செய்யும் கெட்ட காரியங்கள் வெளியாகி விடுகிறது என்றும் தெரிவித்தார்.
-
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா?












Click it and Unblock the Notifications