பாஜக நிர்வாகி வீடு இடிப்பு.. திருவண்ணாமலை கோயில் நிலத்தையே ஆக்கிரமித்ததால் அதிரடி! ரூ.50 கோடியாம்
ஆக்கிரமித்து வீடு கட்டிய பாஜக நிர்வாகி சங்கர், அஜித் மற்றும் வெங்கடேசன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவண்ணாமலை: அண்ணாமலையில் கோயில் நிலத்தில் 3,800 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த பாஜக நிர்வாகியின் வீடு அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு இருக்கிறது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை கண்டித்து போலீசாரை ஒருமையில் பேசிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வடக்கு கோபுரத்தை கடந்த 17 ஆம் நூற்றாண்டில் கட்டி முடித்த பெண் சித்தர் அம்மணி அம்மாளும் கட்டுமானப் பணியாளர்களும் தங்குவதற்காக கோயில் வளாகத்தில் 108 தூண் மண்டபத்தில் வசித்தனர்.
அந்த மண்டபத்தை அவரது பக்தர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக அது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது சர்ச்சைக்கு உள்ளானது. இந்த ஆக்கிரமிப்பு விரிவடைந்துகொண்டே இருந்த நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டில் இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த இடம் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்துக்கே சொந்தம் என்று கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே வழங்கியது. ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதியில் 3,800 சதுர அடியில் பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் சங்கர் என்பவர் வீடு கட்டி இருந்தார்.

ஆக்கிரமித்த பாஜக நிர்வாகி
2 மாடிகளை கொண்ட வீடு, குடோன், அலுவலகம் ஆகியவற்றை அந்த இடத்தில் கட்டி இருந்தார் சங்கர். இதனை தொடர்ந்து அந்த இடத்தை விட்டு காலி செய்ய வேண்டும் என சங்கரின் மனைவி தீபாவுக்கு அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் நோட்டீஸை அனுப்பி இருந்தது. ஆனால், அதை எதிர்த்து உரிமையையியல் நீதிமன்றத்தில் சங்கர் வழக்கு தொடர்ந்தார்.

ஆதாரம் இல்லை
அதேபோல் அறநிலையத்துறை நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்ற நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையிலும் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே அவர் தாக்கல் செய்த மனுவில் ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாஜக நிர்வாகி வீடு
அதை தொடர்ந்து பாஜக நிர்வாகி 3,800 சதுர அடி பரப்பளவில் கட்டி இருந்த வீடும் அவரது அலுவலகமும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அம்மணி அம்மாள் தங்கி இருந்த 108 தூண் மண்டபமும் இடிக்கப்பட்டது.

ஒருமையில் பேசிய பாஜக நிர்வாகி
இதற்கிடையே அம்மணி அம்மாள் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து அங்கு வீடு கட்டி இருந்த பாஜக நிர்வாகி சங்கர் காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்போது அத்துமீறி கோயில் இடத்திற்குள் நுழைந்ததாக கூறி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஏழுமலை, கார்த்திகேயன், காளியப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பாஜக நிர்வாகி தலைமறைவு
இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய பாஜக நிர்வாகி சங்கர், அஜித் மற்றும் வெங்கடேசன் ஆகியோரை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் திருவண்ணாமலை கோயில் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications