ஆளுநர் நிராகரித்திருப்பது அநியாயம்.. ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளின் கூட்டாளி.. சாடும் பாலகிருஷ்ணன்!
ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் கம்பெனிகளின் கூட்டாளியாக ஆளுநர் செயல்படுவதாக பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை: ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நடத்தும் கம்பெனிகளின் கூட்டாளியாக செயல்படுவதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியபோதும் அதனை ஆளுநர் நிராகரித்திருப்பது அநியாயம் என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்.19ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதாவைத்தான் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தது.

மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்
இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கோரி அனுப்பப்பட்டது. இந்த சட்ட மசோதா ஆளுநரிடம் கடந்த 4 மாதங்களாக பரிசீலனையில் இருந்தது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக அந்த சட்ட மசோதாவில் சில விளக்கங்களைக் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். ஏற்கனவே ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய பதில் அளித்த நிலையில், மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CPIM Balakrishnan
இந்த நிலையில் திருவண்ணாமலை அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டு பேரணியாக புறப்பட்டு சிறிது தூரம் சென்றபோது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பாலகிருஷ்ணன் பேட்டி
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், திருவண்ணாமலை இனாம் காரியந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுளது. நான்கு வழி சாலைகளை அமைக்காமல் இருவழிச்சாலையாக இருக்கும்போது சுங்கச்சாவடி அமைத்து மத்திய அரசு கொள்ளையடித்து வருகிறது. சுங்கச்சாவடி அமைப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் இருந்த போதும் அனைத்து விதிமுறைகளையும் மீறி திருவண்ணாமலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி விவகாரம்
சுங்கச்சாவடியை அப்புறப்படுத்தக்கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை எவ்வித பலனும் இல்லை. மாநில அரசு கூறுவதையும் மத்திய அரசு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும். அதேபோல் 20 சதுர கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக சுங்கச்சாவடியில் அனுமதி வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி
தொடர்ந்து ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா திருப்பி அனுப்பபட்டது பற்றிய கேள்விக்கு, ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து ஆளுநர் செய்வது அராஜகமான செயல். ஜனநாயகத்திற்கு விரோதம். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்துவிட்டனர். பல ஆயிரம் கோடி ரூபாய் இழந்துள்ளனர். தங்களது சொத்தையும் இழந்து குடும்பத்தையும் இழந்து நடுவீதியில் நின்று கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியபோதும் அதனை ஆளுநர் நிராகரித்திருப்பது அநியாயம். தொடர்ந்து விளக்கம் கேட்கும் ஆளுநர் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நடத்தும் கம்பெனிகளின் கூட்டாளியாக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications