85 வயதில் முதல்முறையாக வாக்களித்த கன்னியப்பன்.. மலர் அலங்கார காரில் அழைத்து வந்த தி.மலை ஆட்சியர்!
Recommended Video
வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியை சேர்ந்த கன்னியப்பன் தனது வாழ்க்கையில் முதல் முறையாக இன்று வாக்களித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (85). இவர் சிறு வயது முதலே கொத்தடிமையாக இருந்து வந்தார். விறகு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார்.
விறகு வெட்டும் தொழில் செய்யும் இவர்கள் வீரம்பாக்கம் புதூர் கிராமத்தில் கடந்த 13 வருடமாக இருந்தனர். இவரது மகள் கருப்பாயி (55), மருமகன் தேவராஜ் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு பாபு (35), பிரபு (32) என்ற மகன்களும், காமாட்சி, ராதிகா என்ற மருமகள்களும் உள்ளனர். இவர்களுடன் ராதிகாவின் தந்தை ராஜேந்திரன் (35) வசித்து வருகிறார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு
கன்னியப்பன் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. வாக்களித்ததும் இல்லை. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டார்.

சட்டவிரோதம்
கொத்தடிமைகள் எனப்படுவது குடும்பத்தில் ஏழ்மை நிலை காரணமாக அந்த ஊர் பணக்காரரிடம் பெற்ற கடனை அடைக்க முடியாமல் சந்ததி சந்ததியாக அவர்களுக்கு பணியாற்றி கடனை கழிப்பது ஆகும். இது சட்டவிரோதம்.

ஒதுக்கீடு
இந்த நிலையில் இவர் இன்றைய தினம் முதல் முறையாக வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி இவருக்கு மருதாடு அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டது.

செய்முறை விளக்கம்
85 வயதில் முதல் முறையாக வாக்களிக்க இருந்த தொழிலாளி உள்பட 7 பேரிடமும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து ஆட்சியர் கந்தசாமி நேரடியாக மருதாடு கிராமம் சென்று அடையாள அட்டை வழங்கி செயல் விளக்கம் அளித்து காட்டினார்.

முதல் வாக்கு
இந்த நிலையில் தேர்தல் நாளான இன்று கன்னியப்பனை ஆட்சியர் கந்தசாமி மலர் அலங்காரம் செய்யப்பட்ட காரில் மருதாடு வாக்குச் சாவடி மையத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார். பின்னர் கன்னியப்பன் உள்பட 8 பேரும் தனது முதல் வாக்கை பதிவு செய்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications