காஞ்சனாவின் காதல்.. அதுவும் வாடகை வீட்டில் ஒரே அட்டகாசம்.. குறுக்கே ஹவுஸ் ஓனர் வேற.. திகைத்த தி.மலை

தச்சம்பட்டு பகுதியில் காணாமல் போனவர்களின் பட்டியலை காவல்துறையினர் சரிபார்த்ததில் உண்மை வெளிவந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த ஹவுஸ் ஓனர் மூதாட்டியை ஆண் நண்பருடன் சேர்ந்து வாடகை வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே உள்ள கண்ணமடை காப்புக் காட்டில் பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட நிலையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, உயிரிழந்தவர் ஒரு பெண்மணி என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தச்சம்பட்டு பகுதியில் காணாமல் போனவர்களின் பட்டியலை காவல்துறையினர் சரிபார்த்தனர். இதில் பேகோபுரம் தெருவை சேர்ந்த வெங்கடாச்சலம் மனைவி விஜயா எனும் 65 வயது மூதாட்டி காணாமல் போயுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூதாட்டிக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் இருந்திருக்கின்றன.

 விசாரணை

விசாரணை

ஒரு வீட்டில் இவர் வசித்து வந்தாலும், அடுத்த வீட்டை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார். இதனையடுத்து வாடகையில் வசித்த காஞ்சனா எனும் பெண்மணியிடம் விசாரணையை மேற்கொண்டதில் காஞ்சனா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். இதில் உண்மை சம்பவம் வெளிவந்துள்ளது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, "உயிரிழந்த மூதாட்டி விஜயாவின் வீட்டில் செல்வம்-காஞ்சனா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.

 ஆண் நண்பர்

ஆண் நண்பர்

இவர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று இருக்கிறது. இந்நிலையில் கணவர் செல்வம் வேலைக்காக வெளியூர் சென்றுவிடுகையில் காஞ்சனாவும் அவரது மகனும் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். வெளியூர் சென்ற செல்வம் குடும்ப தேவைகளுக்கு சரியாக பணம் அனுப்பாமல் இருந்திருக்கிறார். இதனால் காஞ்சனா அன்றாட தேவைகளுக்கே கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். அப்போதுதான் இதே பகுதியை சேர்ந்த ஞானவேல் என்பவர் காஞ்சனாவுக்கு பழக்கமாகியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் நட்பாகவும் பின்னர் திருமணம் மீறிய உறவாகவும் வளர்ந்திருக்கிறது.

 தனிமையில் சந்திப்பு

தனிமையில் சந்திப்பு


இதன் காரணமாக ஞானவேல் அடிக்கடி காஞ்சனாவை சந்திக்க தனிமையில் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இதனை கவனித்த மூதாட்டி விஜயா, காஞ்சனாவை கண்டித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. நிலை இப்படி இருக்கையில் காஞ்சனா வாடகை பாக்கி தாராமல் இழுக்கடித்துள்ளார். இதையொட்டி பிரச்னையை கிளப்பிய விஜயா, காஞ்சனாவை கடுமையாக பேசியிருக்கிறார். இதில் மனமுடைந்த காஞ்சனா தனது ஆண் நண்பர் ஞானவேலிடம் இது குறித்து கூற இருவரும் சேர்ந்து விஜயாவை தீர்த்துக்கட்டுவது என முடிவெடுத்துள்ளனர்.

கொலை

கொலை


எனவே இதற்கேற்றார்போல் இரண்டு தினங்களுக்கு முன்னர் மூதாட்டி விஜயாவின் வீடு புகுந்து கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட காஞ்சனாவுடன் சேர்ந்து மூத்தாட்டின் சடலத்தை காப்பு காட்டிற்கு கொண்டு சென்று எரித்துள்ளனர். நேற்று காப்புக்காட்டு பக்கம் சென்ற மக்கள் கொடுத்த தகவலின் படி இந்த விஷயம் வெளியில் கசிந்திருக்கிறது" என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து காஞ்சனா அவரது ஆண் நண்பர் ஞானவேல் என இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+