பட்டாவுக்கு லஞ்சம்! விவசாயி செய்த மறக்க முடியாத சம்பவம்.. வந்தவாசியில் கையும் களவுமாக சிக்கிய விஏஓ
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தனிப்பட்டா வழங்க 5 ஆயிரம் லஞ்சம் தருமாறு கிராம நிர்வாக அலுவலர் கேட்டுள்ளார். முதல் தவணையாக 2 ஆயிரம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ பால்பாண்டியனை கையும் களவுமாக கைது செய்தனர்.
கிராம நிர்வாக அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் அடுத்தடுத்து வழக்குகளில், லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கி, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு மேற்கோண்டாலும் இந்த லஞ்சம் வாங்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம் தான். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அரங்கேறியுள்ளது.
தனிப்பட்டா வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்து இருக்கிறார்கள்.. இது குறித்த விவரம் வருமாறு:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் கணேஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனக்கு சொந்தமான 51 சென்ட் விவசாய நிலத்தின் கூட்டுப் பட்டாவை தனிப் பட்டாவாக மாற்றி தரக் கோரி வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கணேஷ் மனு அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் பால்பாண்டியனை கணேஷ் தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார். அப்போது பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று வி.ஏ.ஓ பால்பாண்டி கேட்டுள்ளார். முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் தரும்படியும் மீதமுள்ள 3 ஆயிரத்தை பிறகு தருமாறும் கேட்டு இருக்கிறார். ஆனால், லஞ்சம் கொடுக்க மனமில்லாத கணேஷ், வி.ஏ.ஓ லஞ்சம் கேட்டது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். ..
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பணத்தை கணேஷிடம் கொடுத்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியது போலவே, , வந்தவாசியில் பால்பாண்டியன் தங்கியுள்ள அறைக்குச் சென்று நேற்று மாலை அவரிடம் கணேஷ் இந்த பணத்தை கொடுத்துள்ளார். அப்போது பணத்தை பெற்றுக்கொண்ட விஏஓ பால்பாண்டியனை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications