டீ குடித்த இளைஞர்.. விரட்டிய கும்பல்.. பஸ்சில் தாவி ஏறியும்.. சரமாரி வெட்டு.. பதற வைக்கும் கொலை!
திருவண்ணாமலை: டீ குடித்து கொண்டிருந்த இளைஞர்.. தன்னை கொல்ல வந்த கும்பலிடம் இருந்து தப்பித்து கொள்ள ஓடும் பஸ்ஸில் ஏறினார். ஆனால் விரட்டி வந்த கும்பலும், பஸ்ஸுக்குள்ளேயே ஏறி இளைஞரை கை, தலை, கால் என சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டது!
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். 28 வயது என்ஜினியர். காஞ்சிபுரத்தில் பழைய கார்களை வாங்கி சேல்ஸ் பண்ணும் வேலையை பார்த்து வருகிறார்.

இவருக்கு கல்யாணம் செய்ய வீட்டில் முடிவு செய்தனர். இதற்காகவே இவரது பெற்றோர், செய்யாறு டவுன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, பெண் தேடி வந்தனர். தினமும் செய்யாறு வந்து போக முடியாது என்பதால், சதீஷ்குமார் காஞ்சிபுரத்திலேயே தங்கி உள்ளார்.
இந்நிலையில், அம்மா, அப்பாவை பார்க்க பைக்கில் சதீஷ்குமார் வந்து கொண்டிருந்தார். சுந்தரி சினிமா தியேட்டர் அருகே உள்ள ஒரு டீக்கடை முன்பு பைக்கை நிறுத்தி விட்டு, அங்கு டீ குடித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், காரில் 10 பேர் கும்பல் கத்தி, அரிவாளுடன் சதீஷ்குமாரை நோக்கி ஆவேசத்துடன் வந்தனர்.
இதை பார்த்து அதிர்ந்த சதீஷ்குமார், டீ கிளாஸை அங்கேயே போட்டுவிட்டு ஓட ஆரம்பித்தார். ஆனால், அந்த கும்பல் சதீஷ்குமாரை விரட்டி கொண்டே வந்தது. அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி ஒரு பிரைவேட் பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது. உடனே சதீஷ்குமார் உயிரை காப்பாற்றி கொள்ள அந்த பஸ்ஸில் ஏறினார். ஆனால் அந்த கும்பலும் அதே பஸ்ஸில் ஏறிகொண்டது.
பஸ்சுக்குள் சதீஷ்குமாரை சுற்றி வளைத்து, கை, தலை என சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதனை கண்ட பயணிகள், கண்டக்டர், டிரைவர் என எல்லோருமே அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். உடம்பெல்லாம் வெட்டு காயத்துடன், சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் பஸ்ஸுக்குள்ளேயே சரிந்து விழுந்தார். ஆனால் அந்த கும்பல் அதற்குள் கீழே இறங்கி வந்த காரிலேயே ஏறி தப்பி சென்றுவிட்டது.
பயணிகள் உடனடியாக செய்யாறு டவுன் போலீஸுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து சதீஷ்குமாரை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் செய்யாறில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சதீஷ்குமாரை கொன்றவர்கள் யார் என்று தெரியவில்லை. என்ன முன்விரோதம் என்றும் தெரியவில்லை. அதனால் அவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது. உறவினர்களிடையே சொத்து தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு தப்பி ஓடியவர்களை 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications