பள்ளியில் கிடந்த மது பாட்டில்கள்.. செல்வப்பெருந்தகைக்கு வந்ததே கோபம்! 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
திருவாரூர்: திருவாரூரில் ஆய்வு மேற்கொண்டபோது 2 பள்ளிகளில் மதுபாட்டில்கள் கிடந்ததால் தலைமை ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்யுமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏவும் பொதுக் கணக்குக் குழு தலைவருமான செல்வப்பெருந்தகை பரிந்துரைக்க, மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தலைமையில் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அடங்கிய பொதுக்கணக்கு குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். மேலும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளை ஆய்வு செய்தனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கல்லூரிகள், பள்ளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி, வேளாண்மை அலுவலகங்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரங்கில் பொதுக்கணக்குக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் கமலப்புறம் அருகே உள்ள வேளுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகளில் செல்வப்பெருந்தகை தலைமையில், பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது அந்த பள்ளிக்கூடத்தில் காலி மதுபாட்டில்கள் கிடந்துள்ளன. மேலும், கழிவறைகள் மிகவும் மோசமான நிலையில் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்துள்ளது.
உடனடியாக இதுகுறித்து பொதுக் கணக்குக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆசிரியர்களை கண்டித்துள்ளனர். அதன் பிறகு பொதுக் கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை இதுகுறித்து உடனடியாக இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி அவர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications