ஐயாம் சபரிங் பிரம் பீவர்.. லூஸ் மோஷன்.. பாட்டி செத்துபோச்சு.. இது இல்லாமல் ஒரு ரியல் லீவ் லெட்டர்!
Recommended Video
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உண்மையான காரணத்தை சொல்லி விடுப்பு கடிதம் கொடுத்த மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை எடுத்தவுடன் அடுத்த நாள் வரும் போது விடுப்பு கடிதம் கொண்டு வர அனைத்து பள்ளிகளும் வலியுறுத்துகின்றன. அப்போதுதான் அந்த மாணவர் தன்னிச்சையாக விடுப்பெடுத்தாரா இல்லை பெற்றோர் சம்மதத்துடன் விடுப்பு எடுத்துள்ளாரா என்பதை தெரிந்து கொள்வதற்காகவும்தான்.
இந்த லெட்டர்களில் நாம் வழக்கம் போல் "I am suffering from fever, stomach pain " இப்படி உடல்நிலையை காரணம் காட்டி எழுதுவது வழக்கம். அது போல் இன்னும் சிலர் ஏற்கெனவே இறந்த பாட்டி, தாத்தா மீண்டும் மீண்டும் இறந்துவிட்டார் என்பது போல் காரணம் சொல்வர்.

விடுப்பு
ஆனால் உண்மையை பார்த்தோமேயானால் பள்ளி செல்ல சோர்வாக இருந்திருக்கும், போர் அடித்திருக்கும், வெறுப்பாக இருந்திருக்கும். ஆகவே இன்று ஒரு நாள் விடுப்பு எடுக்கலாம் என நினைப்பர். யாரும் உண்மையான காரணத்தை சொல்ல மாட்டோம்.

விடுப்பு கடிதம்
ஆனால் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேல ராதாநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் உண்மையான காரணத்தை கூறி விடுப்பு எடுத்துள்ளான். அந்த பள்ளியில் படித்து வரும் தீபக் என்ற மாணவர்தான் இதுபோன்ற விடுப்பு கடிதத்தை எழுதியுள்ளார்.

உடல் சோர்வு
இவர் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 90 சதவீத மதிப்பெண்ணை எடுத்துள்ளார். இந்த நிலையில் தீபக் நேற்று முன் தினம் விடுப்பு கடிதத்தை எழுதியிருந்தார்.அதில் அவர் குறிப்பிடுகையில் நான் நேற்று ஊரில் நடந்த கபடி போட்டியை இரவு முழுவதும் கண் விழித்து பார்த்தேன். இதனால் உடல் சோர்வாக உள்ளது.

வகுப்பு ஆசிரியர்
எனவே எனக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ஒரு நாள் லீவுக்காக பொய்களை கூறும் மாணவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு மாணவனா என்ற வகுப்பு ஆசிரியர் மணிமாறன் வியந்தார்.

பாராட்டுகள்
இந்த நிலையில் உண்மையை கூறி விடுப்பு எடுத்த மாணவன் எழுதிய கடிதத்தை அவரது படம், விடுப்பு கடிதத்துடன் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட்டார். இதையடுத்து மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications