ஐயாம் சபரிங் பிரம் பீவர்.. லூஸ் மோஷன்.. பாட்டி செத்துபோச்சு.. இது இல்லாமல் ஒரு ரியல் லீவ் லெட்டர்!
Recommended Video
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உண்மையான காரணத்தை சொல்லி விடுப்பு கடிதம் கொடுத்த மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை எடுத்தவுடன் அடுத்த நாள் வரும் போது விடுப்பு கடிதம் கொண்டு வர அனைத்து பள்ளிகளும் வலியுறுத்துகின்றன. அப்போதுதான் அந்த மாணவர் தன்னிச்சையாக விடுப்பெடுத்தாரா இல்லை பெற்றோர் சம்மதத்துடன் விடுப்பு எடுத்துள்ளாரா என்பதை தெரிந்து கொள்வதற்காகவும்தான்.
இந்த லெட்டர்களில் நாம் வழக்கம் போல் "I am suffering from fever, stomach pain " இப்படி உடல்நிலையை காரணம் காட்டி எழுதுவது வழக்கம். அது போல் இன்னும் சிலர் ஏற்கெனவே இறந்த பாட்டி, தாத்தா மீண்டும் மீண்டும் இறந்துவிட்டார் என்பது போல் காரணம் சொல்வர்.

விடுப்பு
ஆனால் உண்மையை பார்த்தோமேயானால் பள்ளி செல்ல சோர்வாக இருந்திருக்கும், போர் அடித்திருக்கும், வெறுப்பாக இருந்திருக்கும். ஆகவே இன்று ஒரு நாள் விடுப்பு எடுக்கலாம் என நினைப்பர். யாரும் உண்மையான காரணத்தை சொல்ல மாட்டோம்.

விடுப்பு கடிதம்
ஆனால் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேல ராதாநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் உண்மையான காரணத்தை கூறி விடுப்பு எடுத்துள்ளான். அந்த பள்ளியில் படித்து வரும் தீபக் என்ற மாணவர்தான் இதுபோன்ற விடுப்பு கடிதத்தை எழுதியுள்ளார்.

உடல் சோர்வு
இவர் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 90 சதவீத மதிப்பெண்ணை எடுத்துள்ளார். இந்த நிலையில் தீபக் நேற்று முன் தினம் விடுப்பு கடிதத்தை எழுதியிருந்தார்.அதில் அவர் குறிப்பிடுகையில் நான் நேற்று ஊரில் நடந்த கபடி போட்டியை இரவு முழுவதும் கண் விழித்து பார்த்தேன். இதனால் உடல் சோர்வாக உள்ளது.

வகுப்பு ஆசிரியர்
எனவே எனக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ஒரு நாள் லீவுக்காக பொய்களை கூறும் மாணவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு மாணவனா என்ற வகுப்பு ஆசிரியர் மணிமாறன் வியந்தார்.

பாராட்டுகள்
இந்த நிலையில் உண்மையை கூறி விடுப்பு எடுத்த மாணவன் எழுதிய கடிதத்தை அவரது படம், விடுப்பு கடிதத்துடன் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட்டார். இதையடுத்து மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications