மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அங்கன்வாடி பெண் ஊழியர்.. 54 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
திருவாரூர்: எரவாஞ்சேரி பகுதியில் 10 ஆம் வகுப்பு மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த அங்கன்வாடி ஊழியர் லலிதாவுக்கு (35) 54 ஆண்டுகள் சிறை, ரூ.18000 அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில் அங்கன்வாடி ஒன்றில் பணியாற்றும் லலிதா என்பவர் 10 ஆம் வகுப்பு மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசார்னை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியை அடுத்த தேதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி லலிதா (40). இவர் அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர், 2021 அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை கடத்திச் சென்று, ஊட்டி மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் எரவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து லலிதாவை போக்சோ பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு, திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. , மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த லலிதாவுக்கு 54 ஆண்டுகள் சிறை, ரூ.18000 அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி சரத் ராஜ், குற்றம்சாட்டப்பட்ட லலிதாவுக்கு, 2 போக்சோ பிரிவுகளின் கீழ் தலா 20 ஆண்டுகள், மற்றொரு போக்சோ பிரிவின் கீழ் 5 ஆண்டுகள், மேலும் 2 பிரிவுகளின் கீழ் 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் நிதி உதவி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தண்டனை பெற்ற குற்றவாளி லலிதாவை திருச்சி பெண்கள் சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications