நாயின் உயிரை காத்த புல்டோசர்.. 15 அடி போர் குழியிலிருந்து மீட்பு - இது திருவாரூர் மாடல்
திருவாரூர்: 15 அடி ஆழ குழியில் விழுந்த நாய் குட்டியை 5 மணி நேர பேராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
திருவாரூர் அருகே குன்னியூர் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் வேப்பதாங்குடி சாலையில் மணல், ஐல்லி விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது கடையின் அருகே ஆழ்துளை கிணறுக்காக தோண்டப்பட்டு இருந்த குழியில் நாய் சத்தம் கேட்டுள்ளது.

குழியில் விழுந்த நாய்க்குட்டி
இதைப்பார்த்த மூர்த்தி அருகில் சென்று பார்த்தபோது, ஆழ்துளை கிணறுக்காக போடப்பட்டிருந்த குழியில் நாய் குட்டி ஒன்று விழுந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து மூர்த்தி நண்பர்கள் உதவியுடன் நாய் குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். நீண்ட நேரம் முயற்சித்தும் அவர்களால் முடியததால், தீயணைப்புத்துறையின் உதவியை நாடி உள்ளனர்.

புல்டோசர் வரவழைப்பு
சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், சுருக்கு கையிறு மூலம் நாய் குட்டியை காலை 8.30 மணி முதல் மீட்டுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. காலம் கடந்து கொண்டே சென்றதால், அதிரடியாக ஜேசிபி புல்டோசர் இயந்திரம் வரவழைக்கப்பட்டது.

மனித நேயம்
அதன் மூலம் போர் குழி அருகே பள்ளம் தோண்டி நாய் குட்டியை மீட்பது என முடிவெடுத்தனர். இதையடுத்து மூர்த்தி தனது சொந்த செலவில் வாடகைக்கு ஜேசிபி இயந்திரத்தை உடனடியாக ஏற்பாடு செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த புல்டோசர் இயந்திரம் மூலம் போர் குழிக்கு அருகாமையில் 15 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர் பள்ளத்திலிருந்து போர் குழிக்கு துளையிட்டு நாய் குட்டியை உயிருடன் மீட்டார்.

5 மணி நேர போராட்டம்
சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நாய்குட்டி மீட்கப்பட்டு அதன் தாயுடன் சேர்க்கப்பட்ட சம்பவம் குன்னியூர் கிராம மக்களிடையே மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்புப்படை வீரர்கள் குழிக்குள் இறங்கி நாயையும் பாதுகாப்பாக மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications