பாஜகவை விரட்டாவிட்டால் 4000 ஆண்டு பழமை கொண்ட தமிழ்நாடு மாநிலமே இல்லாமல் போய்விடும்: ஸ்டாலின் சீற்றம்
திருவாரூர்: பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டாவிட்டால் தமிழகம் என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.
திருவாரூர் மாவட்டம் காட்டுரில் கலைஞர் கோட்ட திறப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். அவர் பேசுகையில் தலைவராகவே திருவாரூரில் என் தந்தை பிறந்தார். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பித்திருக்கும் தேஜஸ்வி யாதவுக்கு நன்றி. என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்பு கோட்டையாக நான் கருதுகிறேன்.
இன்னமும் கலைஞர் வாழ்கிறார், ஆள்கிறார் என்பதன் அடையாளமாக இந்த கோட்டம் உள்ளது. வாழ்வில் எத்தனை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் என் தாய் அன்பு மாறாதவர். மன்னர்கள் தாங்கள் இருக்கும் போது கோட்டம் கட்டுவார்கள். ஆனால் மறைந்த பிறகு கோட்டம் கட்ட காரணமாக அமைந்தவர் கருணாநிதி.
வான் புகழ் வள்ளுவனுக்கு கோட்டம் எழுப்பிய கருணாநிதிக்கு திருவாரூரில் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம் இல்லத்திற்கு நிறைய இந்திய அரசியல் தலைவர்கள் வந்துள்ளனர்.
இந்த விழாவில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திடீரென அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு பணியாற்றி பாஜக அரசுக்கு முடிவு தட்ட வேண்டும். பாஜக பரப்ப வரும் காட்டுத்தீயை ஜனநாயகத்தின் விளக்கு மூலம் அணைக்க வேண்டும்.
இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டிய நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம். இதை செய்யாவிட்டால் 3000, 4000 ஆண்டு பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். கலைஞருடைய உயிரினும் உயிரான உடன்பிறப்புகள் இதை செய்யாவிட்டால் வேறு யாராலும் இதை செய்ய முடியாது.
மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது, தமிழ், தமிழ்நாடு, தமிழ் இனத்திற்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கே கேடாக அமைந்துவிடும். தமிழகத்தில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். வரும் 24 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஜனநாயக விளக்கு ஏற்றப்படும். நானும் அதில் பங்கேற்கிறேன். நாளை நமதே, நாற்பதும் நமதே என முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
-
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்!












Click it and Unblock the Notifications