மனைவியின் கள்ளக்காதலுடன் வேளாங்கண்ணி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய கணவன்.. கதவை திறந்து பார்த்தால் ஷாக்!
திருவாரூர்: வேளாங்கண்ணி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய கணவன் - மனைவி மற்றும் கணவரின் நண்பர் ஆகிய 3 பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக் கடிதத்தில் "யாரும் எங்கள் சாவுக்கு காரணம் இல்லை" என கூறப்பட்டிருந்தது. கள்ளக்காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் விருப்பாச்சிபுரம் பாதிரிபுரத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 49). இவரது மனைவி விஜயகுமாரி (44). கலியபெருமாளின் நண்பர் லோகநாதன்.

வேளாங்கண்ணி லாட்ஜில் ஷாக்
இந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி லோகநாதனுடன் கணவன், மனைவி இருவரும் வேளாங்கண்ணிக்கு வந்தனர். அங்கு பேராலயத்திற்கு சொந்தமான ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். முதலில் ஒரு நாள் தான் அறை எடுத்து தங்கியிருந்தனர். பின்னர் மறுநாளும் அறையை புக் செய்திருந்தனர்.
இதற்கிடையில், பக்கத்து ரூமில் இருந்தவர்கள் எதார்த்தமாக பார்த்தபோது கலியபெருமாள் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். ஜன்னல் வழியாக பார்த்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக இது குறித்து விடுதி மேலாளரிடம் தெரிவித்தனர். அவர் உடனடியாக போலீசுக்கு அழைத்தார். அதன்பேரில் வேளாங்கண்ணி போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
தற்கொலை கடிதம்
இதில், லோகநாதன் மற்றும் விஜயகுமாரி ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டபடி தரையில் கிடந்தனர். கலியபெருமாள் தூக்கில் தொங்கியபடி இறந்திருந்தார். அறையில் சோதனை செய்தபோது ஒரு கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. அந்தக் கடிதத்தில், "நாங்கள் மூவரும் தற்கொலை செய்யப்போகிறோம். இதற்கு யாரும் காரணம் இல்லை" என்று எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து மூவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது: கலியபெருமாளின் நண்பர் லோகநாதனுக்கும் விஜயகுமாரிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஊரை விட்டு ஓடி சென்றுள்ளனர்.
மனைவி காணாமல் போனதாக
இதனால் அதிர்ச்சியடைந்த கலியபெருமாள், தனது மனைவி விஜயகுமாரி காணாமல் போய்விட்டார் என வலங்கைமான் போலீசில் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென ஒரு நாள் வந்து "என் மனைவி திரும்பிவந்துவிட்டாள்" என்று கூறி கலியபெருமாள் அந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து தான் வேளாங்கண்ணி சென்ற அவர்கள் அங்கு அறை எடுத்து ஒன்றாக தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது. கள்ளக்காதல் பிரச்சனையால்தானா தற்கொலை செய்துக்கொண்டனர், அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications