திருவாரூரில் ஓஎன்ஜிசி குழாய் வெடித்தது.. கச்சா எண்ணெய் பரவியதால் 2 ஏக்கர் பருத்தி வயல் நாசம்!
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாய் வெடித்து சிதறியதில் கச்சா எண்ணெய் பரவியதால் 2 ஏக்கர் பருத்தி வயல் முழுவதும் நாசம் அடைந்தது.
திருவாரூர் அருகே எருக்காட்டூரில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய்க் குழாய் அமைக்கும் பணியை செய்து வருகிறது. இந்த திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் செல்வராஜுக்கு சொந்தமான பருத்தி வயலில் திடீரென எண்ணெய் குழாய் வெடித்து சிதறியது. இதில் கச்சா எண்ணெய் கொப்பளித்து பரவத் தொடங்கியது.
இதனால் 2 ஏக்கர் வயல் சேதமடைந்தது. 10 அடி ஆழத்தில் தோண்டி குழாய்களை புதைக்காமல் விவசாய நிலத்தின் மேற்பரப்பிலேயே புதைத்து விடுவதால் இதுபோன்ற சேதங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.












Click it and Unblock the Notifications