முதுமையை காரணம் காட்டி சொத்துக்களை பிடுங்கிக்கொண்டு அனாதையாக்கிய மகன்கள்.. ஆட்சியரிடம் தந்தை புகார்
Recommended Video
திருவாரூர்: முதுமையை காரணம் காட்டி பெற்ற மகன்களால் அனாதையாக்கப்பட்ட தந்தை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். 60 வயதான இவருக்கு மேனகா என்ற மனைவி உள்ளார்.
இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர், தன்னிடம் இருந்த சொத்துக்களை மூன்று மகன்களுக்கும் கோவிந்தராஜ் பிரித்துக் கொடுத்து விட்டார்.

தாயை மட்டும்..
அதன் பின்னர் இவரது மகன்கள் மூன்று பேரும் கோவிந்தராஜை கைவிட்டதாக தெரிகிறது. இவரது மனைவி மேனகாவை மட்டும் இரண்டாவது மகன் ரமேஷ் என்பவர் தனது பராமரிப்பில் வைத்துள்ளார்.

பார்ப்பவர்களிடம் உணவு
தந்தை கோவிந்தராஜை வைத்துப் பராமரிக்க மூன்று மகன்களும் போட்டி போட்டு வருகின்றனர். மகன்கள் யாரும் தந்தையை கவனித்துக்கொள்ள முன்வராத நிலையில், விரக்தியடைந்த கோவிந்தராஜ் திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகிறார். பார்ப்பவர்களிடம் உணவு கேட்டு, தனது வயிற்றுப் பசியைப் போக்கி, கிடைத்த இடங்களில் படுத்துறங்கி வருகிறார்.

ஆறுதல் கூறிய ஆட்சியர்
இந்நிலையில் கோவிந்தராஜ் நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் தனது நிலையை விளக்கி புகார் மனு அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக முதியவர் கோவிந்தராஜுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

அவலத்தின் உச்சம்
பெற்றப்பிள்ளைகளை ஆளாக்க அல்லும் பகலும் உழைத்தவர்கள் தந்தைமார்கள். தான் பார்க்காத உயரத்தையும் தனது பிள்ளைகள் பார்க்க வேண்டும் என அயராது உழைத்தவர்கள் ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் பிள்ளைகள் அவர்களால் எந்த பலனும் இல்லை என அனாதையாக விடுவது அவலத்தின் உச்சம் என்பதை மறுக்க முடியாது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications