திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து.. இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு
திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
Recommended Video

திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
வரும் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருந்தது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறப்பட்டது.
இதனால் தமிழக அரசியல் கடந்த ஒரு வாரமாக பெரிய பரபரப்பாக இருந்தது. இந்த நிலையில் திடீரென்று தேர்தல் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

மனுக்கள்
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி திருவாரூர் தொகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர். அதேபோல் இந்த தேர்தலுக்கு எதிராக திமுக, கம்யூனிஸ்ட், அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் குரல் கொடுத்தன.

கஜா
கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. இந்த சேதத்தில் இருந்து மக்கள் இப்போதுதான் மீண்டும் வருகிறார்கள். மீட்பு பணிகள் இப்போதுதான் நடந்து வருகிறது. அதேபோல் 20 தொகுதிகள் தமிழகத்தில் காலியாக உள்ளது. எல்லா தொகுதிக்கும் சேர்த்துதான் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தனர்.

அறிக்கை கோரிக்கை
இதற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்திலும் மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் மற்றும் புகார்களை அடுத்து திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்தார்.

அறிக்கை அளித்தார்
மாவட்ட தேர்தல் அதிகாரி அரசியல் கட்சிகள், மக்கள் ஆகியோரிடம் ஆலோசனை செய்து நேற்று தனது அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த நிலையில் தற்போது திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

அதிர்ச்சி
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் அறிவிப்பு காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியல் பெரிய பரபரப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications