மன்னார்குடியில் இப்படியொரு பெண்ணா? சத்தமின்றி கழிவறைக்கு போன நர்ஸ் நிஷா.. அடுத்து திகைத்த திருவாரூர்
திருவாரூர்: 15 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார் நர்ஸ்.. லீவு முடிந்து இன்றைய தினம் வெளிநாடு கிளம்ப உள்ள நிலையில், திடீரென இந்த முடிவை எடுத்துள்ளார்.. இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ளது அசேஷம் ராஜராஜன் நகர்.. இங்கு வசித்து வருபவர் கோவிந்தராஜ்.. இவர், சென்னையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

ஃபிளைட் டிக்கெட் ரெடி
இதில், 3வது மகள் நிஷா, பி.எஸ்சி நர்சிங் படித்துள்ளார்.. சவுதி அரேபியாவில் நர்சாகவும் பணியாற்றி வருகிறார்.. கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு நிஷா வந்திருந்தார்.. நேற்றுடன் லீவு முடிந்து, இன்று மீண்டும் சவுதி அரேபியா திரும்பி செல்ல ஃபிளைட் டிக்கெட் எடுத்து இருந்தார். இதற்காக நேற்று முன்தினமே, துணிமணிகளை எடுத்து வைத்து கொண்டார்.
அன்றைய தினம், தன்னுடைய 2 அக்காக்களுடன் வீட்டில் இருந்த நிஷா, கழிவறைக்கு சென்றுள்ளார்.. ஆனால், வெகு நேரம் ஆகியும் நிஷா வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரிகள், கழிவறையின் கதவை திறந்து பார்த்தனர்.. அப்போது, நிஷா ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்..
கதறி துடித்த குடும்பம்
கூர்மையான கத்தியால் தன்னுடைய கழுத்தை, தானே அறுத்துக் கொண்டுள்ளார்.. இதைப்பார்த்து அலறிய குடும்பத்தினர், நிஷாவை மீட்டு உடனடியாக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள், நிஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மன்னார்குடி நகர போலீசார், நிஷாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்காக அனுப்பி வைத்தனர். பிறகு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர். அப்போதுதான், நிஷாவின் காதல் விவகாரம் வெளியே தெரிந்தது..
கடுமையான மன உளைச்சல்
சவுதி அரேபியாவில் நிஷா வேலை பார்த்து கொண்டிருந்தபோது, கேரளாவை சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார்.. அந்த இளைஞரும் நிஷாவை விரும்பியிருக்கிறார்.. ஆனால், அந்த இளைஞருக்கு திடீரென வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது.. இதைக்கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த நிஷா, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.. அவரால் சவுதி அரேபியாவில் இயல்பாக இருக்க முடியாமல், 15 நாள் லீவு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்..
அப்போதும், காதலன் இன்னொரு பெண்ணை மணக்க இருப்பதை அறிந்து தாங்கி கொள்ள முடியாமல், தன்னுடைய கழுத்தை அறுத்து கொண்டு, தற்கொலை செய்து கொண்டது முதல்கட்டமாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. செல்லமாக வளர்த்து, நர்ஸ்க்கு படிக்க வைத்த மகளின், சடலத்தை கண்டு பெற்றோர் கதறி அழுதது காண்போரை உலுக்கி எடுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications