காமராஜர் வீட்டுக்கு தீ வைத்தவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள்.. சபாநாயகர் அப்பாவு ஆவேசம்
திருவாரூர்: கல்விக்காக காமராஜர் ஆற்றிய பணிகள் அளப்பறியது. ஆனால் காமராஜரையே கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய வீட்டிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தீ வைத்தனர் என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.
திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக்கல்லூரியில் "சட்டமன்ற நாயகன் கலைஞர்" என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அப்போது அப்பாவு கூறியதாவது: - முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி இந்த கருத்தரங்கில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அரங்கம் முழுவதும் பெண்கள் அதிகமாக உள்ளீர்கள்.

இதுதான் திராவிட மாடல் அரசு செய்த சாதனையாகும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கண்ட கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கல்லூரியில் 4 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதற்கு காமராஜர் கட்டிடம் என பெயர் வைக்கப்பட உள்ளது. காமராஜர் இல்லாமல் போயிருந்தால் தமிழ்நாட்டில் பலருக்கும் படிப்பு என்ற வாசனையே இல்லாமல் போயிருக்கும்.
காமராஜர் வீட்டுக்கு தீ: கல்விக்கு காமராஜர் ஆற்றிய பணி அளப்பறியது. ஆனால் காமராஜரையே கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய வீட்டிற்கு ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தீ வைத்தனர். நாட்டில் அனைவரும் படிக்க வேண்டும் என எண்ணிய காமராஜரையே வீட்டோடு தீ வைத்து எரித்துக் கொல்ல முயற்சி செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். அது மட்டும் இன்றி மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்.
இந்தியாவில் அதிக பெண்கள் பட்டம் படித்துக் கொண்டு இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பெண்கள் படிப்பது நம் நாட்டில் சிலருக்கு பிடிக்காமல் உள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களுக்குப் போதுமான நிதியை வழங்க மறுக்கிறது. புதிய கல்விக் கொள்கை என்கிற நாசகாரக் கொள்கையைக்கொண்டு வந்து, ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார்களின் கூடாரமாக கல்வியை மாற்ற முயற்சி செய்துவருகிறார்கள்" என்று கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்- காரர்களின் கூடாரம்: பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அப்பாவு கூறியதாவது:- கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தோழர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளித்திருந்தால், ஆளுநருக்குத்தான் அது பெருமையாக இருந்திருக்கும். ஆனால், ஆளுநர் அதை செய்ய மறுத்துவிட்டார். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்கள் பணி மூப்பின் அடிப்படையில்தான் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் மத்திய அரசுதான் நுழைவுத்தேர்வு வைத்து ஆசிரியர்களை தேர்வு செய்யச் சொன்னது.
மோடி ஆட்சி அமைத்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் கடன் சுமை 140 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான கடன் தொகை நாட்டிலுள்ள பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உயர் பதவிகளில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரையே அதிகம் நியமனம் செய்து, நாட்டை ஆர்.எஸ்.எஸ்- காரர்களின் கூடாரமாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications