Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bus Accident: நேருக்கு நேர் மோதிய பஸ்கள்.. திருவாரூர் அருகே பயங்கர விபத்து.. 20 பயணிகள் படுகாயம்!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கோட்டூர்புரம் அருகே தனியார் பஸ் - அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இரு பஸ்களின் முன்பகுதிகள் பலத்த சேதமடைந்த நிலையில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு பஸ்களும் விபத்துக்குள்ளாகியதால் அந்த சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

tiruvarur-bus-accident-private-and-government-buses-crash-head-on-20-injured

நேருக்கு நேர் மோதி விபத்து

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடிக்கு சென்ற அரசு பேருந்தும், மன்னார் குடியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு சென்ற தனியார் பேருந்தும் தான் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. இது தொடர்பான காட்சிகள் நெஞ்சை உருவக்குவதாக அமைந்துள்ளது. இரு பஸ்களின் முன்பகுதியும் உருக்குலைந்தது. உடனடியாக அங்கிருந்த சக வாகன ஓட்டிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தவர்களை பஸ்சில் இருந்து வெளியே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உதவினர்.

விபத்துக்கான காரணம் என்ன?

மன்னார்குடி மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. நடு ரோட்டில் இரு பஸ்களும் விபத்துக்குள்ளாகி கிடந்ததை அடுத்து அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விபத்து கடுமையாக இருந்தாலும் நல்வாய்ப்பாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட இடமானது குறுகிய சாலை என்பதாலும், வளைவில் திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ் வேகமாக இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

தென்காசியில் நேருக்கு நேர் மோதிய பஸ்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்ப்ட்டது. இந்த விபத்தில் 7 பயணிகள் பலியாகினர். 60 பயணிகள் காயம் அடைந்தனர். அதேபோல, கடந்த 30 ஆம் தேதி திருப்பத்தூரில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலியாகினர்.

அடுத்தடுத்து ஏற்படும் விபத்துகள்

அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த பேருந்து விபத்துகளினால் ஏற்பட்ட சோகம் மறையும் முன்பே மீண்டும் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பேருந்து ஒட்டுநர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் ஓய்வு அளிக்க வேண்டும்.

நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், கடவுள்தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா உண்மையாகவே பூலோக சொர்க்கம்தான். சுற்றிலும் இயற்கை சூழ்ந்த பகுதி, சுத்தமான காற்று, நீர் நிலைகள் என நம்மை மெய் மறக்க வைத்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு நெட்டிசன், 'உலகிலேயே மிக சுத்தமான கிராமத்திற்கு தகுதியானது தான் இந்த இடம். பார்க்கவே மிகவும் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் இடமாக இது இருக்கும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+