Thiruvarur: திருமணம் முடிந்து 5 மாசம்தான் ஆகுது.. திருவாரூர் அருகே புது மாப்பிள்ளைக்கு நடந்த துயரம்
திருவாரூர்: திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே மாமனார் வீட்டில் இருந்த மனைவியை பார்த்துவிட்டு, நள்ளிரவில் காரில் வீட்டுக்கு புறப்பட்ட போது நடக்கக்கூடாத துயர சம்பவம் நடந்துள்ளது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்தது. இதில் காரில் தீப்பற்றிய நிலையில் காரின் கதவுகளை திறந்து வெளியே வரமுடியாமல், காருக்குள்ளேயே இருந்து தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமணம் ஆகி 5 மாதங்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் அருகே உள்ள விஜயபுரம் செல்வம் தெருவை சேர்ந்தவர் ஹாஜி முகமது. பனகல் சாலை அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முகமது ரபிக் (வயது 28). இவருக்கு கடந்த 5 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து இருந்தார்.
கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மனைவி தன் அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதனால் மனைவியை பார்ப்பதற்காக நேற்று முன் தினம் இரவு காரில் புதுக்கோட்டைக்கு முகமது ரபீக் சென்றுள்ளார். மனைவியை பார்த்துவிட்டு நேற்று இரவு மீண்டும் திருவாரூருக்கு புறப்பட்டுள்ளார்.
திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில் நள்ளிரவு 2.30 மணியளவில் முகமது ரபீக் காரில் வந்துகொண்டிருந்தார். நாகை பைபாஸ் சாலை பகுதியில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலையின் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. உடனே கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. காருக்குள் சிக்கிக்கொண்ட முகமது ரபிக்கால் வெளியே வர முடியவில்லை. உதவி கேட்டு அலறியுள்ளார்.
நள்ளிரவு நேரம் என்பதால் அந்த சாலையில் அந்த நேரத்தில் யாரும் இல்லை.. கொஞ்சம் கொஞ்சமாக கார் தீப்பிடித்து முழுவதுமாக எரியத் தொடங்கியது. இதனால் கார் கதவை திறந்து வெளியே வரமுடியாமல் அப்படியே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
தீயணைப்பு படையினர் உடனடியாக காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் காருக்குள் பிணமாக உடல் கருகிய நிலையில் முகமது ரபீக் மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது, புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
-
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி! -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்! -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா?












Click it and Unblock the Notifications