திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குழந்தையை பார்க்க ஏன் வந்தாய்?- கத்தியால் குத்திக்கொண்டு சண்டை- திருவாரூரில் ஷாக்!

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில், குடிபோதையில் சண்டையிட்ட இருவர், ஒருவொருரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்ட சிசிடிவி பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மடவடியார் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவிக்கு, திருவாரூர் விஜயபுரத்தில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, சுரேஷின் மாமியாருக்கு பழக்கமான கண்ணன் என்பவர், குழந்தையை பார்ப்பதற்காக அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

 Two drunken people stabbing each other in government hospital premises in Tiruvarur

ஏற்கனவே சுரேஷுக்கும், கண்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ள நிலையில், தற்போது, தனது குழந்தையை கண்ணன் பார்க்க வந்தது, சுரேஷுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, என் குழந்தையை பார்க்க ஏன் மருத்துவமனைக்கு வந்தாய் என கண்ணனுடன், சுரேஷ் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

குடுமியை பிடித்துக்கொண்டு.. மாறி மாறி சண்டை போட்ட மாணவிகள்.. காரணத்தை கேட்டா.. ஆடிடுவீங்க! குடுமியை பிடித்துக்கொண்டு.. மாறி மாறி சண்டை போட்ட மாணவிகள்.. காரணத்தை கேட்டா.. ஆடிடுவீங்க!

இருவரும் ஒருவொருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதோடு, மருத்துவமனை வளாகத்தில் இருவரும் கட்டி புரண்டு சண்டையிட்டுள்ளனர். அப்போது சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணனை குத்தி உள்ளார். இதற்கு பதிலடியாக கண்ணணும் சுரேஷை தாக்கியுள்ளார். பிரசவ மருத்துவமனை வளாகத்தில் இரண்டு பேரும் கத்தியால் மோதிக்கொண்ட சம்பவத்தால், அங்கிருந்த பெண்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 Two drunken people stabbing each other in government hospital premises in Tiruvarur

இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, கத்தியால் குத்தப்பட்டு காயம் அடைந்த கண்ணனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். குழந்தையை பார்ப்பதற்காக வந்தவரை, மதுபோதையில் கத்தியால் குத்திய சுரேஷை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரசவ மருத்துவமனை வளாகத்தில், இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிட்டு, கத்தியால் குத்திக் கொள்ளும் சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
CCTV footage of 2 drunken men stabbing and fighting in the Tiruvarur Government Maternal Health Hospital complex has been released.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X