ஒரு வார பரபரப்பு.. அரசியல் விறுவிறுப்பு முடிவிற்கு வந்தது.. திருவாரூர் தேர்தல் ரத்தானது ஏன்?
திருவாரூர் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video

திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
வரும் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதேபோல் ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறப்பட்டது.
இதற்காக திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வேகமாக தயாராகி வந்தது. அதிமுக இன்று வேட்பாளரை அறிவிப்பதாக இருந்தது.

எதிர்ப்பு உருவானது
ஆனால் இந்த தேர்தலை ரத்து செய்யும்படியும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. திமுக, கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் கூட தேர்தலை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்து வந்தது. 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள போது, திருவாரூருக்கு மட்டும் தேர்தல் நடத்த கூடாது என்று கோரிக்கை வைத்து வந்தது.

அடுத்தடுத்து நடந்த அதிரடி
இந்த நிலையில் இது தொடர்பாக அடுத்தடுத்து அதிரடி சம்பவங்கள் சில நடந்தது.
1. திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி திருவாரூர் தொகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மனு தாக்கல் செய்தார்.
2. அவருக்கு அடுத்தபடியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
3. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா இந்திய தேர்தல் ஆணையத்திலும் இந்த தேர்தலுக்கு எதிராக மனு அளித்தார்.

என்ன கோரிக்கை வைத்தனர்
இவர்கள் வைத்த கோரிக்கையில், கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. மீட்பு பணிகள் இப்போதுதான் நடந்து வருகிறது. இதனால் தேர்தல் நடத்த கூடாது என்று கூறி இருந்தனர்.

காரணம் சொல்லவில்லை
இதனால் தற்போது திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இந்த அறிவிப்பு அறிக்கையில் தேர்தலை ஏன் ரத்து செய்தோம் என்று கூறவில்லை. தேர்தல் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

ஏன்
ஆனாலும் மாநில கட்சிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் நிறைய மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்தார்.

ஆலோசனை நடந்தது
இதையடுத்து தமிழக கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்தது. அதில் பெரும்பாலான கட்சிகள் தேர்தல் நடத்த வேண்டாம் என்று கூறி இருந்தது. திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட இதே கருத்தை வைத்திருந்தது. தற்போது அவர்களின் கோரிக்கையின் படியே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications