திருப்பதியில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமர் சிலையின் உடைந்த விரல் சரி செய்து மீண்டும் பொருத்தம்
திருப்பதி: திருப்பதியில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமர் சிலையின் உடைந்த கைவிரல், சிறப்பு பூஜைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.
பஞ்சலோக ராமர் சிலையில் கடந்க 2021 ஆம் ஆண்டு கைவிரல் சேதமடைந்தது. கோவில்களில் சிலைகள் சேதமடைந்தால் கும்பாபிஷேக நிகழ்வின் போது அவை சரி செய்யப்படும். இதனால் வரும் 2030 ஆம் ஆண்டு ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேக விழாவில் உடைந்த ராமர் சிலையின் விரலை சரி செய்து பொருத்த முடிவு செய்யப்பட்டது.

உடைந்த கைவிரலுடன் சுவாமி இருப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என சொல்லப்பட்டது. இதையடுத்து துண்டிக்கப்பட்ட விரலின் பகுதி தங்க கவசத்தால் மூடப்பட்டது. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழுவிடம் சிலையின் விரலை மீண்டும் பொருத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து கோயில் அர்ச்சகர்களிடம் கலந்து பேசி சிறப்பு பூஜைகள் மூலம் புதிதாக விரலை செய்து மீண்டும் சுவாமி சிலையில் பொருத்தலாம் என அந்த குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடந்தது. சிறப்பு ஹோமம் , பூர்ணாஹுதி உள்ளிட்டவை நடந்தன. இதைத் தொடர்ந்து ராமரின் உடைந்த கைவிரல் சரி செய்து மீண்டும் பொருத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications