எரிபொருள் காலி.. வயல்வெளியில் இறங்கிய விமானம்.. ஆந்திராவில் பரபரப்பு!
Recommended Video
திருப்பதி: திருப்பதி அருகே எரி பொருள் பற்றாக்குறையால் ஆனந்தபுரம் மாவட்டத்தில் தனியார் குட்டி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஜிண்டால் நிறுவனத்திற்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று இரண்டு பேருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, நடுவானில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட விமானி விமானத்தை திருப்பதி அருகே உள்ள அனந்தபூர் மாவட்டம் எரிதிகேரா கிராமத்தின் வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கினார். இதில் விமானத்தில் இருந்தவர்கள் அதிர்ஷடவசமாக காயமின்றி உயிர் தப்பினர். தொடர்ந்து விமானத்தை மீண்டும் அங்கிருந்து எடுத்துச் செல்வதற்கு பணிகளில் விமானத்தின் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தங்கள் கிராம வயல்வெளிப்பகுதியில் குட்டி விமானம் தரையிறங்குவதை கவனித்த கிராம மக்கள், விமானம் தரையிறக்கப்பட்ட பகுதிக்கு சென்று குட்டி விமானத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டு, செல்போனில் புகைப்படம் எடுத்து சென்றனர்.
வயலில் விமானம் இறங்கினாலும் கூடயாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.