திருப்பதியில் முதல்முறையாக கணவருடன் தரிசனம்.. நடிகை காஜல் அகர்வாலை துரத்திய "மொட்டை" நபரால் பரபரப்பு
திருப்பதி: திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த நடிகை காஜல் அகர்வாலை மொட்டை போட்டிருந்த நபர் ஒருவர் விடாமல் துரத்தி கொண்டே வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை காஜல் அகர்வால் அவரது கணவருடன் சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை தனது கணவர் ,குழந்தையுடன் திருமலைக்கு வந்தார் காஜல் அகர்வால்.
அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்த பிறகு அவருக்கு ரங்கநாயக்க மண்டபத்தில் அவருக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கணவருடன் இணைந்து தற்போது முதல்முறையாக திருப்பதிக்கு வந்துள்ளார்.
திருப்பதி பிரம்மோற்சவம்..பூலோக வைகுண்டமாக மாறிய ஏழுமலையான் கோவில் - என்னென்ன சிறப்பம்சங்கள்
கோவிந்தா
அவர் கோயிலை விட்டு வெளியே வந்த போது கோவிந்தா என அழைத்தார். பின்னர் அவருடன் அங்கிருந்தவர்கள் செல்பி எடுத்து கொண்டனர். ரசிகர்களை பார்த்து சிரித்தபடியே வந்தார் காஜல். அப்போது மொட்டையடித்த நபர் ஒருவர் காஜல் அகர்வாலை பின்தொடர்ந்து கொண்டே வந்தார்.
முண்டியடித்த நபர்
ஒரு கட்டத்தில் அவர் முண்டியடித்தபடியே காஜல் அகர்வாலின் பக்கத்தில் வந்து அவரை பார்த்து சிரித்தார். காஜலும் பதிலுக்கு சிரித்தார். இதையடுத்து அவர் சென்றுவிட்டார். மொட்டையடித்த நபர் தொடர்ந்து காஜல் பின்னாடியே வந்து கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி கோயில்
அது போல் கடந்த 2018 ஆம் ஆண்டு திருப்பதி கோயிலுக்கு நடிகை காஜல் அகர்வால் சாமி கும்பிட வந்தார். அப்போது அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். செல்பி எடுக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் ரசிகர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீஸார் கூட்டத்தினரை அப்புறப்படுத்தி காஜலை கோயிலுக்குள் அழைத்து சென்றனர்.
சிறப்பு தரிசனம்
அங்கு சிறப்பு தரிசனம் செய்த காஜலுக்கு ரங்கநாயக்க மண்டபத்தில் காஜலுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தான் மன ஆறுதலுக்காக குடும்பத்தினருடன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்ததாக காஜல் அகர்வால் தெரிவித்திருந்தார். அது போல் காஜல் வந்ததை அறிந்த பலர் மாட வீதிகளில் குவிந்தனர். பிறகு சிலருடன் செல்பி எடுத்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.